சனி, 18 செப்டம்பர், 2010

ஆனையிறவில் பேரூந்துகள் நேருக்குநோ் மோதி 5 பேரின் நிலை கவலைக்கிடம்,18 பேர்

கிளிநொச்சிஆனையிறவில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் போக்குவரத்து பேரூந்துகள் ஒன்றோடொன்று நேருக்குநோ் மோதிக்கொண்டதில், 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் ஐந்து பேரும் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த அரச போக்குவரத்து பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரில் சிலரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: