ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கும் கிராமிய தமிழ் பாடல்... மறந்துபோன மண்ணின் தமிழ்


Herbert Rajan : கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமிய தமிழ் பாடல்.அந்த பாடலுக்கும்,குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மா.
மலையாள திரையுலகமும்,மீடியாக்களும் அவரை போற்றிக்கொண்டு இருக்கிறது இப்போது.கேரளா அரசும் கிராமிய பாடலுக்கான விருதை கொடுத்து கௌரவித்து இருக்கிறது."அய்யப்பனும் கோஷியும் " என்ற மலையாள திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ,பாடிய அவரின் சொந்த பாடல் இன்று கேரளாவின் சூப்பர் ஹிட் பாடலாக அங்கே ஒலித்துக்கொண்டு இருக்கிறது.சினிமாவை பற்றி ஏதும் தெரியாத அந்த பாமர தமிழ் குயிலின் குரல் உலகமெங்கும் ஒலிக்க என் ஆசை.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.
பாடலை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களை அறியாமல் உங்கள் தலையும்,கைகளும் மனமும்...அசைந்தாடும்.பாடலின் தமிழ் உச்சரிப்பும்,வார்த்தைகளும் நமக்கு புரிய சற்று சிரமமாக இருக்கும் ஏனென்றால் நாம் நாட்டுப்புற தமிழை மறந்து பல ஆண்டுகள் ஆகிப்போனது.


கருத்துகள் இல்லை: