செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

குஜராத் 'தீண்டாமை' சுவர்.. ட்ரம்ப் இந்தியா வருகை.. குடிசைவாசிகளை காலி செய்ய அகமதாபாத் நகராட்சி உத்தரவு

  Tamil.indianexpress.com: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையையொட்டி குடிசைவாசிகளை காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மணைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக வருகிற 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர். அவர்களது பயணத்தில் முக்கியமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ட்ரம்ப்பும், மோடியும் இணைந்து ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். அதேபோல், கெம்ச்சோ ட்ரம்ப் (குஜராத்தில் மொழியில் கெம்ச்சோ என்றால் எப்படி இருக்கிறீர்கள் என அர்த்தம்) என்ற நிகழ்ச்சியில் மோடியும் ட்ரம்ப்பும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வானது மொதேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ளார். “மிஸ்டர். டிரம்ப் 3 மணி நேரம் இருப்பார், 100 கோடியை ஒதுக்கு” குஜராத் பாஜக அதிரடி!


அதுதவிர, சாலை ஊர்வலம் ஒன்றை மேற்கொள்ளும் ட்ரம்ப், காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்று பார்வையிடவுள்ளார். அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி, சுவர்களை அலங்கரிப்பது, சாலைகளை மேம்படுத்துவது, சாலை ஓரங்களில் செடிகள் அமைப்பது, என அகமதாபாத்தை அலங்கரிக்கும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ட்ரம்ப்பின் குஜராத் பயணத்துக்காக ரூ.100 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக வெளியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு, வேலையிண்மை, வறுமை, போக்குவரத்து என தீர்க்க வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் குஜராத் மாநிலத்தில் ஏராளமாக உள்ள நிலையில், ட்ரம்ப் வருகைக்கு இத்தனை கோடி நிதி ஒதுக்குவதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

முஸ்லிம்கள் கல்லறை மீது ராமர் கோவில் கட்ட வேண்டுமா?

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க அதிபர் வரவிருக்கும் பாதையில் அமைந்துள்ள இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் அல்லது தேவ் சரண் எனும் குடிசைப்பகுதியை மறைக்க, அரை கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது.

சுமார் 6 முதல் 8 அடி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன. அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.


காலி செய்ய நோட்டீஸ்

மக்களின் ஏழ்மை நிலையை அமெரிக்க அதிபர் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்த சுவர் கட்டப்படுவதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாராவது முக்கிய நபர்கள் வந்தால் இப்பகுதியை பெரிய துணி ஒன்றால் மறைத்து வைத்து விடுவார்கள். ஆனால், இப்போது சுவர் எழுப்பி நிரந்தரமாக மூடுகிறார்கள் என குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், தண்ணீர், மின்சாரம், கழிப்பிடம் என அடிப்படை வசதிகளே இங்கு இல்லை. எங்களது பகுதியை மறைப்பதற்கு பதிலாக எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து நல்ல வீடு கட்டித் தரலாம். அதை விடுத்து எங்களது ஏழ்மையை ஏன் மறைக்கப்பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையையொட்டி சரணியவாஸ் குடிசைவாசிகளை காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 45 குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் 7 நாட்களுக்குள் அவர்கள் காலி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ட்ரம்ப் வருகைக்கும், காலி செய்ய சொன்னதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலப் பிரச்ச்சினை காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


குடிசைகளை மறைக்கும் சுவர்

குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 6 ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி, குஜராத் மாடல் என்ற பிம்பத்தை காட்டிதான் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். குஜராத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் ஏற்றம், அடிப்படை வசதிகள் என நாட்டின் முன்னோடி மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்ற பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு குஜராத் மாடல் எனும் பிம்பத்தை காட்டி பிரதமராக மோடி முன்னிறுத்தப்பட்டார்.

ஆனால், அப்போதே குஜராத்துக்கு சென்று ஆய்வு நடத்திய சில ஊடகங்கள், சமூக அமைப்புகள் குஜராத்தில் நிலவும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டின என்பது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் மக்களின் ஏழ்மை நிலையை, அடிப்படை வசதிகளற்ற நிலையை மறைக்க கட்டப்பட்டு வரும் சுவர் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: