புதன், 19 பிப்ரவரி, 2020

சீமானின் கொள்ளையை தட்டி கேட்டதால் விலக்கப்பட்ட வியனரசு .. (ஸ்டெர்லைட் மாமூல்)


Shankar A: நாம் தமிழர்  நாறக் கதைகள்-4
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு வெளியேற்றப்பட்டதிற்கு காரணம் சீமான் கொள்ளையை தட்டி கேட்டதே. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்றபோது தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தன..அதில் மக்கள் அதிகாரம் ,புஇமு,அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி,இடதுசாரி கட்சிகள். இந்த போராட்டத்தில் போராட்ட குழுவில் முன் நின்று நடத்தியவர்களில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசும் ஒருவர். இந்த போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் 14 பேர் இறந்து போயினர். பல்வேறு அடக்குமுறை நடைபெற்றது. இதில் போராட்டத்தில் போராடத்திலிருந்து ஒதுங்கி கொள்ள பல்வேறு இயக்க தலைவர்களுக்கும்,கட்சியின் தலைவர்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் பெரிய நிதி பேரம் பேசப்பட்டது. நாம் தமிழர் கட்சியை தவிர யாரும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளாராக இருந்த நெல்லை சிவக்குமார்தான் சீமானுக்கும்,ந்ஸ்டெர்லைட் ஆலைக்கும் புரோக்கராக செயல்பட்டார்.
அப்போது நெல்லை சிவக்குமார் மூலம் சீமானுக்கு பெரிய நிதி கொடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் நின்று கொண்டிருந்த வியனரசுவை சீமான் தொடர்பு கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொன்ன போது வியனரசு மறுத்து விட்டார். பின்பு ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வியனரசு மிது பல்வேறு வழக்குகளை காவல்துறை பதிவு செய்தனர். ஜாமீன் எடுக்க கட்சி உதவி செய்யாததை கேட்க சீமான் அவர்களுக்கு அலைபேசியில் வியனரசு தொடர்பு கொண்டபோது சீமான் எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையில் நிதி வாங்கியதை அறிந்த வியனரசு மறுபடியும் சீமானை தொடர்பு கொண்டு பேசியபோது போனில் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதை வியனரசு வெளியில் சொல்லிவிடுவார் என்பதை அறிந்த சீமான் இரண்டு நாட்களில் பொய்யான குற்றசாட்டைச்சொல்லி வியனரசுவை கட்சியை விட்டு நீக்கினார். ஏன் தம்பி நீக்கினீர்கள் என்று கேட்டபோது கட்சியே என்னுடையது என்று சொல்லிவிட்டார்..தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனிடம் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் நெல்லை சிவக்குமார் மூலம் பெரிய நிதியை பெற்றதை அறிந்த போதே சீமானுக்கும், வியனரசுக்கும் பிரச்சனை தொடங்கியது. கட்சி வளர்க்கின்ற நோக்கமே இல்லாத சீமான் ,பல்வேறு தவறுகளை கேள்விகேட்ட தமிழ் தேசிய உணர்வில் உள்ள தம்பிகளை நீக்கியுள்ளார். இவரை சுற்றி 15 நபர்கள் உள்ளனர். மூன்று மாவட்டத்திற்கு ஒரு புரோக்கர். இவர் பேசுவத்தற்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை. கட்சிக்காக உழைத்து கட்சியை விட்டு யாரும் வெளியேறினாலும் கவலை கொள்ளமாட்டார்.
இவரை பற்றி அறிந்த உலகம் முழுவதும் உள்ள விடுதலை புலிகள் உளவுபிரிவு நிதி கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள்,வெளிநாட்டில் வாழும் ஈழ தமிழர்களும் நிதி கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் ,நிறைய வெளிநாட்டு தமிழர்களும் நிதி கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இதை சமாளிக்கதான் உள்நாட்டில் கட்சியில் உள்ள தம்பிகளிடம் துளி திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 12000ரூபாய் மாதம் சந்தாவில் வசூல் செய்கின்றனர். உணர்வோடு உள்ளே வருபவர்கள் 6 மாதத்தில் கட்சியை விட்டு ஓடிவிடுகின்றனர். கட்சி பொறுப்பில் ஒருவன் நீடித்தால் அவன் சீமானுக்கு புரோக்கராகதான் இருக்க முடியும்.
சீமானின் உண்மை முகம் வெளிப்பட வெளிப்பட தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் கூடிய விரைவில் கட்சியை விட்டு வெளியேவர உள்ளார்கள்.
சீமானை நம்பி இனியும் சில்லரையை சிதற விடாதீர்கள். சீமான் தமிழர்களுக்காக கட்சி நடத்தவில்லை. தன் சொந்த வளர்ச்சிக்காக மட்டுமே கட்சி நடத்துகிறார். பணம் சம்பாதிப்பது மட்டுமே அவரின் ஒரே நோக்கம்.

கருத்துகள் இல்லை: