சனி, 14 ஆகஸ்ட், 2010

அடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.....மலிவு விலை மளிகை ரூ.25:..

வெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வித மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொத்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.

ஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.
பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
Rajeesh - Ooty,இந்தியா
2010-08-14 14:33:41 IST
ஒன்னு இலவசமா குடுங்க இல்லேன்னா மலிவா குடுங்க. மலிவா குடுத்தா தரமும் மலிவா இருக்கும்ன்னு யாருக்கு தெரியும்? அப்புறம் இந்திய பொருட்கள் தரமில்லைன்னு எல்லோரும் சொல்லட்டும். தமிழனை பிச்சைக்காரனாவே வெச்சிடுங்க என்ன?...
Ebinezer - Mumbai,இந்தியா
2010-08-14 14:02:31 IST
good...
xxx - Australia,இந்தியா
2010-08-14 13:57:45 IST
People are stupid and admitting this type of peple to rule Tamilnadu....
உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-14 13:51:31 IST
இலவசம் கொடுத்து நாட்டு மக்களையும் கஜானாவையும் காலி செய்ய கலைஞர் முடிவு செய்து விட்டார். அடுத்து வரும் ஆட்சியாளர்கள் கன்னா-பின்னா என்று வரி விதிக்க இது வழி வகுக்கும்!...
ஹே ராம் - பெங்களூரு,இந்தியா
2010-08-14 13:06:23 IST
கொடுக்கிற கலைஞர் தெய்வம் கூரையை பிச்சிகின்னு கொடுக்கபோகிறது .. வோட்டு போட உள்ள அனைவரும் கொடுப்பதை எல்லாம் வாங்கி கொள்ள தயார் .. அனைவரும் வீட்டின் கதவுகளை திறந்தே வைத்திருக்கவும் .. எப்போது எது கிடைக்குமோ !!...
appavi - salem,இந்தியா
2010-08-14 13:02:15 IST
நல்லா நடக்குதுடா அரசாங்கம் ... கடைசியில தமிழ்நாட்டு காரன் கோமனத்தோட அலைவான்... அப்ப சொல்லுவானுங்க மானிய விலையில் கோமணம்... நாம எல்லோரும் வாங்கிட்டு ஒரு கைய முன்னாடியும் இன்னொரு கைய பின்னாடியும் மூடிக்கிட்டு போலாம்......
ராஜேஷ்குமார் - திருச்சி,இந்தியா
2010-08-14 11:29:54 IST
இந்த ADMK காரங்களுக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகள் "ஊழல், கொள்ளை, டிஸ்மிஸ் பண்ணு" இவைகள் மட்டும்தானா? அதைத்தவிர தமிழில் பல நல்ல வார்த்தைகளும் நல்ல சிந்தனைகளும் உள்ளன....
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-08-14 10:04:38 IST
இலவசம். மலிவு விலை அடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.......
சூர்யா - சென்னை,இந்தியா
2010-08-14 08:16:28 IST
ஊழல் ஊழல்...
உ.மெய்யன்பன் - chennai,இந்தியா
2010-08-14 07:49:52 IST
50 ரூபா பாக்கெட்டில் மிளகை பொடியில் செம்மன் இருந்ததால் தான் பிறகு யாரும் வாங்க வில்லை.நல்ல பொருளை விலை சற்று அதிகமா இருந்தாலும் வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே மலிவு என்பதை விட நல்ல பொருளை சொல்வது போல கொடுங்கள்...
ஆArumainathan - kanchi,இந்தியா
2010-08-14 07:43:25 IST
சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று ஆகிவிட்டது துவரம் பருப்புக்கு பதிலாக அதே போல இருக்கிற மைசூர் பருப்பை போடுகிறார்கள் மைசூர் பருப்பு வெளிமர்கட் விலை ரூபாய் 35 ஆனால் ரேசன் கடையில் 40...
raki - Hiroshima,ஜப்பான்
2010-08-14 07:19:13 IST
Everything is OK, but I don't understand why all the government supplies or the schemes like noon meal should carry the name or picture of the then CMs. It is not from their own pocket money. I wonder, if there is any law to contrl this. I am tired of seeing this old man and the fat lady in every government supplies....
ராஜேஷ் கருப்பையா - சவுதிஜுபைல்,இந்தியா
2010-08-14 07:06:44 IST
மலிவு விலையில் ஆணுறை கொடுக்க வேண்டியது தானே. அதையெல்லாம் விட்டு விட்டு தேவை இல்லாத வேலை செய்கிறார்கள், ஒரு நல்ல ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை முதல்வன் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும், ஆட்சி நல்ல இருந்ந்தால் நாங்கள் ஏன் வெளிநாட்டிற்கு வந்து வேலை பார்க்கிறோம் இந்தியன் அந்நியனாக...
.க.செல்வம் - devakoottai,இந்தியா
2010-08-14 07:02:47 IST
யார் ஆட்சிக்கு வந்தாலும் நா இதை செஞ்சேன் அதை செஞ்சேன்னு அள்ளி விடுவிங்க , அதை ஒங்களோட சாதனை பட்டியல்ல (வெக்கமே இல்லாம ) சேத்துப்பிங்க , இது என்ன ஒங்க அப்பனோட பணமா? அரசாங்க கஜானாவுல எவ்வளவு இருப்பு இருக்கு ? கடந்தேன் இருக்கு , எல்லாமே இல்லவசமா கெடைகனும்முன்னு எதிபார்க்கிற மக்கள், மக்களை ஏமாத்தி பொழைக்கிற அரசியல்வாதி , குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளந்தாரிபயலுக , இருக்கிற நாடு???????????????????????????????????...
செந்தில் - மெம்பிஸ்,யூ.எஸ்.ஏ
2010-08-14 04:31:01 IST
வெரி nice...
குமார் - coimbatore,இந்தியா
2010-08-14 04:26:51 IST
அரசு கேபிள் டிவி அடக்கமாகச் செயல்படுகிறதா அல்லது அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா? ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வரவு செலவு திட்டத்தை கையாளும் வல்லமை கொண்ட மாநில அரசால் துவங்கப்பெற்ற அரசு கேபிள் டி.வி அடக்கி வாசிக்க வேண்டிய நிலை யாரால் உருவாக்கப்பட்டது? நீதி நேர்மையின் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுமேயானால் ஒளிவு மறைவின்றி அரசு கேபிள் டி.வி துவக்கப்பட்ட நோக்கம், இன்றைய நிலை உட்பட அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-14 02:43:11 IST
ஹலோ, என்னங்க கவர்மென்ட் இது? விடியகாலைல பூளை கண்ணோட ஒருத்தன் எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு, பல்லு விளக்கி, சோத்த தின்னு, டாஸ்மாக் ல போய் கட்டிங் போட்டுட்டு, ஊரு மேஞ்சிட்டு, திரும்ப ஒரு கட்டிங்க போட்டுட்டு, கால் பின்ன பின்ன ஊட்டுக்கு வந்து, இலவச டி.வி பாத்துட்டு, இலவச அரிசிய போட்டு, அரசு மளிகை சாமான போட்டு தின்னு புட்டு, தூங்கி, மறுபடி பூளை கண்ணோட எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு... ஏங்க இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இதுக்கா ஒரு அரசாங்கம் வெச்சு இருக்கோம். இப்படி ஒவ்வொன்னையும் நோகாம அரசாங்கமே கொடுக்கணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க நாடு முன்னேறும். நாட்டுக்குள்ள மக்கள் மாடுமாறி உழைக்கனும், வரி கட்டனும், பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோசமா இருக்கணும். அரசாங்கம் மக்கள் உழைக்கவும், நல்லா இருக்கவும் வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கணும். அதுக்குதானங்க அரசாங்கம். அதுக்குன்னு இப்படியா? ஓட்டு விழாது... ஓட்டு விழாது... ஆட்சி போய்டும் ன்னு இப்படியே பண்ணிட்டு இருந்தா வருங்கால சந்ததிங்க எல்லாம் எப்படிங்க நல்லா பொழைக்கும். என்னமோ போங்க இந்த ஓட்டுக்கு வேண்டி இப்படி ஏமாத்தியே சாவடிங்க எல்லோரையும். விட்டா தமிழக அரசின் பேன்சி ஸ்டோர், பழைய பேப்பர்கடை, தயிர்மண்டி, இஸ்திரி நிலையம், முடி திருத்தகம், டீ கடை இதெல்லாம் கூட ஆரம்பிச்சு இலவசமா சர்விஸ் பண்ணுவாங்க போல இருக்கு. நல்லா இருக்குடா உங்க அரசாங்கம்....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-14 02:42:22 IST
சட்டசபை தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ? பொரி உருண்டை,கமர்கட் போன்ற பொருட்களையும் 
கமர்கட் போன்ற பொருட்களையும் மானிய விலையில் கொடுப்பார்கள் yena.எந்த அளவுக்கு அவமானபடுத்தினாலும் அவமானபடாத மாதிரி நடிப்பதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை

கருத்துகள் இல்லை: