சனி, 14 ஆகஸ்ட், 2010

மீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 50 000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது

இடம்பெயர்ந்த முகாம்களிலிருந்து மீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
மீள் குடியேறுவோருக்கு இதுவரையில் 25 000 ரூபா வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அந்தத் தொகை 50 000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
 
மெனிக்பாம் இடம்பெயர் முகாமிலிருந்து சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு முன்வரும் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
 
அரசாங்க மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
 
ஏற்கனவே மீள் குடியேறியவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி இடம்பெயர் முகாமிலிருந்து மீள் குடியேறுவதற்கு செல்லும் குடும்பங்களுக்கு 50 000 ரூபா பணமும் 16 கூரைத் தகடுகளும் ஆறு மாத காலத்திற்கான உலர் உணவுப் பொருட்களும் விவசாய மற்றும் சமையலறை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன

கருத்துகள் இல்லை: