சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆட்சேபம, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை புத்தளம் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கைக்கு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ள முஸ்லிம்களை புத்தளம் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சேபம் வெளியிட்டுள்ளது.1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாகவும்இ அவர்களே இன்று புத்தளத்தில் தற்காலிமாக தங்கியிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் சீமெந்து வீடுகளை கட்டியிருக்கும் முஸ்லிம்கள் நிரந்தரமாக புத்தளத்தில் வதிவதாக தேர்தல் செயலகம் மதிப்பீடு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார். மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ.எம். சிறிவர்தனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவிற்கு வடக்கு இடம்பெயர் முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: