சனி, 14 ஆகஸ்ட், 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியது


ஒன்பது தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் கட்சிகளின் அரங்கம்  இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியுள்ளது. மட்டக்களப்பு ஆளுநர் விடுதியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவ்அரங்கம் கூடியுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணி தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ உட்பட 9 தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உள்ளுர் தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: