வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மும்பை தாக்குதல் போல் புலிகள் தாக்குதலை மேற்கொள்ளலாம் : பேராசிரியர் ரொஹான் குணரட்ன

இலங்கை மீது மும்பையில் இடம்பெற்ற தாக்குதல் போலவே புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் எனவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இலங்கை இந்திய கடல் எல்லையில் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இன வன்முறை தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளில் தற்போது எஞ்சியுள்ள புலிகள் தமிழ் நாட்டை மீண்டும் தம்மை பலப்படுத்திக்கொள்ள பயன்படுத்தலாம் எனவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சர்வதேச சமூகத்துடனட் சுமூகமான உறவுகளைப் பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்க முடியும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இன வன்முறை தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: