செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

மேவின் சில்வா பதவியில் இருந்து நீக்கம்

சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய
மேவின் சில்வாவை பிரதி அமைச்சர் பதவியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீக்கியுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேவின் சில்வாவின் கட்சி உறுப்புரிமையை நீக்கியுள்ளது.
கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்திலேயே இந்த முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமுர்த்தி அதிகாரி மீது அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது. அனைவராலும் கண்டிக்கப்பட்ட சம்பவமாக இருந்தது.
இதனையடுத்தே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: