வியாழன், 12 ஆகஸ்ட், 2010

7 வயது மகளை கூவி, கூவி விற்ற கொடுமை ; போதைக்கு வழி தெரியாத தந்தையின் முடிவு

கடப்பா: குடி போதைக்கு தனது மகளையே விற்ற கொடுமை ஆந்திராவில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுப்பகுதியில் அதிர்ச்சியை தந்திருந்தாலும், குழந்தையை வாங்குவதற்கும் ஒருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து, வர மறுத்த அந்த குழந்தையை தர, தர., வென இழுத்துச்சென்றவரை இப்பகுதி மக்கள் நையப்புடைத்தனர் என்பது கொஞ்சம் ஆறுதல்.
ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்களுடைய வறுமையை போக்கிட இப்படி முடிவு எடுக்கிறார்களாம். நேற்று கடப்பா மாவட்டம் ராமாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு: லக்கிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (40 ). இவர் கூலித்தொழில் ( கட்டட பணி ) செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜம்மா இறந்து விட்டார். இதனையடுத்து மகள் பூதேவி (வயது 7 ) தந்தை (?) யுடன் இருந்து வந்தார்.
 
புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா : குடிப்பழக்கம் கொண்ட கிருஷ்ணய்யா அடிக்கடி தனது மகளை துன்புறுத்தி வந்துள்ளார், இதனையடுத்து இவரது தாத்தா , பாட்டி இல்லத்திற்கு கொண்டு பின்னர் ஒரு ஹாஸ்டலில் சேர்த்தனர். இந்நிலையில் கடந்த ஆக.5 ம் தேதி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள். இவளை டவுணில் ஒரு ஓப்பன் பகுதிக்கு கொண்டு சென்று புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா என கூவி , கூவி ஏலம் விட்டார் கிருஷ்ணய்யா. குழந்தை கண்ணீருடன் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றது.
ஆரம்ப விலை 300 என ஏலத்தை துவக்கினார். இந்த வியாபாரத்தில் இந்த வழியாக சென்ற காதர்பாட்சா என்பவர் விலைக்கு வாங்கி கொள்வதாக கூறி தந்தையிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இவருடன் செல்ல பூதேவி மறுக்கவே தர, தரவென இழுத்து சென்றார்.இதனை பார்த்த இப்பகுதி மக்கள் கூடி நின்று காதர்பாட்சாவையும், கிருஷ்ணய்யாவையும் நையப்புடைத்தனர். தொடர்ந்து போலீஸ் வரவே காதர் ஓடி விட்டார். கிருஷ்ணய்யாவை போலீசார் கைது செய்தனர். குழந்தை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
குழந்தையை விற்க முடிவு செய்தேன் : போலீசாரிடம் குழந்தை விற்க வந்த காரணம் குறித்து கிருஷ்ணய்யா கூறியதாவது: நான் குடிப்பழக்கம் கொண்டவன். வழக்கமான ஒரு மதுக்கடையில் கடன் கேட்டேன் தர மறுத்து விட்டனர். இதனால் குழந்தையை விற்க முடிவு செய்தேன் என்றார் மது மயக்கத்தில். ஆந்திராவில் குழந்தைகள் விற்பனை பல சம்பவங்கள் மறைமுகமாக நடந்து வந்தாலும், இந்த பூதேவியின் விற்பனை மட்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பழனிமுத்து - பஹ்ரைன்,இந்தியா
2010-08-12 15:15:53 IST
அந்த குழந்தையின் அப்பாவுக்கு தயவு செய்து தக்க தண்டனை கொடுங்கள். நம்ம அரசாங்கம் அந்த குழந்தைக்கு உதவ வேண்டும்....
காஷ்காஷ் - இந்திய,இந்தியா
2010-08-12 15:03:59 IST
Because of political....(two separators)...Stupid politicians !......
நந்தினி - bangalore,இந்தியா
2010-08-12 14:58:11 IST
என்ன சொல்வது???? இந்த பாழாய் போன குடி பழக்கத்தை விட்டு ஒழித்தால் என்ன செத்தா போய்விடுவார்கள்?...
karthik - chennai,இந்தியா
2010-08-12 14:53:48 IST
கலைஞர் ஐயா, இந்த கொடுமையை பாருங்கள்,இதனால் நீங்கள் சரக்கையும் இலவசமாக தர உத்தரவு போடுங்கள்....
sri - chennai,இந்தியா
2010-08-12 14:53:27 IST
மிகவும் வருத்தம் தரகூடிய செய்தி... இது போன்ற அல்பங்களை encounter செய்ய வேண்டும். எங்க போனார்கள் 24 x 7 NDTV, Times now and CNN IBN secular media கூட்டம்... ஹ்ம்ம்... நடத்த சம்பவம் காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஆயிற்றே? வாழ்கே சோனியா !! வளர்க நேரு செக்கூலரிசும் !!!...
புரட்சி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-08-12 14:53:19 IST
பிறப்பு விகிதம் குறைய மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் முன்னேறினால் நாடு தானாக வளரும்....
எந்திரன் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-08-12 14:51:13 IST
பிறப்பு விகிதம் குறைய மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் முன்னேறினால் நாடு தானாக வளரும்....
Riyas - khobar,சவுதி அரேபியா
2010-08-12 14:50:59 IST
நாசமா போக ,,, இவன் எல்லாம் ஒரு அப்பன்...
அனந்தன் - mumbai,இந்தியா
2010-08-12 14:50:53 IST
நமது நாட்டில் எல்லாத்துக்கும் ஒதிக்கீடு உண்டே!! அவனுடைய சமூகத்துக்கு இலவசமாக மது சப்பளை செய்துவிட வேண்டியதுதானே!! மற்றபடி வருமானத்தை கெடுக்கும் யோசனைகள் வேண்டாமே. இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள்யும் மக்கள் குடிக்கிறார்கள் ஆனால் இது போல இல்லை என்பதயும் எண்ணிப்பார்க்க வேண்டும்....
mapa - kollam,இந்தியா
2010-08-12 14:47:53 IST
ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுத்தால் இது மாதிரி சம்பவம் எதிர் காலத்தில் நடக்காது....
g.myilsamy - coimbatore,இந்தியா
2010-08-12 14:45:25 IST
என்ன மனிதன் இவன். இவனுக்கு எல்லாம் தூக்குத்தண்டனை கொடுக்க வேணும் இல்லேன்னா இந்த மாதிரி எத்தனியோ சிறுமிகளின் வாழ்கை சீரழியும் என்பது உறுதி...
எந்திரன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-12 14:43:29 IST
நம் நாட்டில் வறுமையை ஒழிக்க முதலில் மக்களுக்கு பிறப்பு விகிதம் பற்றி விழிப்புணர்வு வேண்டும். நூறு+ கோடியை தாண்டி இன்னும் சென்று கொண்டு இருக்கிறோம். நாம் எல்லோரூம் சுயநலம் தவிர்த்து மனிதம் வளர்க்க வேண்டும். இந்த செய்தி நிச்சயம் எதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் வரும் - கண்டு விட்டு மறந்து விட கூடாது. இந்திய மக்கள் மனம் மாறினால் தான் ஏற்றம் வரும்...
கே.வசந்தி - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-12 14:41:53 IST
இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க இதன் தலைவர் முடிவு எடுக்க வேண்டும்...
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-12 14:27:34 IST
பழனி, சென்னை. என்ன இந்தியா வல்லரசாக போகிறதா...........................ஏண்டா சொல்லவே இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், பூடான் இப்படி எல்லோருமே சொல்லி கொள்ளலாம். நாங்களும் வல்லரசாக போகிறோம் என்று. நல்ல வேளை வல்லரசு ஆகிவிட்டது என்று கூறவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். சீனாவை தவிர. வளர்ந்த நாடுகளுக்கு நன்றாக தெரியும் எப்படி இந்தியாவை வளரவிடாமல் தடுக்க. நம்முடைய நட்டு நிலையும் அப்படிதான் உள்ளது. இப்ப இருக்கிற அரசியல் சட்டத்தை, பொருளாதார கொள்கைகளை வைத்து கொண்டு ஒன்னும் செய்ய முடியாது. 2020 -இல் இல்லை. 20010 - இல் கூட வல்லரசாக முடியாது....
சாமி - திருப்பூர்,இந்தியா
2010-08-12 14:24:50 IST
அதான் நம்ம ஊருல அரசே மதுக்கடைகள் நடத்துதே. இந்த மாதிரி இங்கேயும் சீக்கிரம் நடக்கும். என்னமோ போங்க, மீண்டும் கற்கால மனிதனாய் மாறும் வரை ஓயமாட்டோம் என்று தோணுது....
ஹாரிஸ் - singapore,இந்தியா
2010-08-12 14:09:59 IST
indiyar என்று சொல்ல vetkapadukerin. அண்ட kodiyavanuku கடுமையான tandanai வழங்கினால் தன இது போல sambavam நடக்காமல் தடுக்க முடியும்....
ராஜா - டெல்லி,இந்தியா
2010-08-12 13:50:34 IST
தயவுசெய்து அந்த பிஞ்சு குழந்தயின் எதிர் காலம் கருதி நான் உதவி செய் 

செய்ய விலாசம் தரவும். உதவுவதற்கு தந்தை கைது செய்ய பட வேண்டும்....
ந.Kaliappan - ஹுப்ளி,இந்தியா
2010-08-12 13:45:29 IST
He is not a human being, what is the difference between us and beast, he should be punished extrmely, where is the politicians, are they sleeping or enjoying with other works. Whoever it may whether daughter or son, no one is slave to others. Politicians wants to keep safe their chair, and making all drama. Instead of selling his child he must be made suicide, where is the god today. Every human being to fear to their soul first, politicians has no time to see this all happenings, their aim is to make money from public and other ways. These all are happening due to Illiteracy. In India only poor peoples getting poor day y day and rich peoples are getting richer every day. Some society should come forward to save her life immediately. I wish her for bright future....
SWAMINATHAN - PUDUKKOTTAI,இந்தியா
2010-08-12 13:39:58 IST
குழந்தையை VIRKAVANDA அந்த குடிகாரனும் அதை வாங்க வந்த காடர் BATCHA வையும் நடு ரோட்டில் சுடவேண்டும். அந்த குழந்தையை KAPAGATHIL சேர்த்து நலபடியாக படிக்கச் வைக்க VENDUM...
THIYAGARAJAN - CHENNAI,இந்தியா
2010-08-12 13:39:15 IST
LET US THANK THE GENERAL PUBLIC...
பிரபு ராமஸ்வாமி - நியூjersy,இந்தியா
2010-08-12 13:18:17 IST
இதை படித்து ஒரு தகப்பனாக நான் கண்ணீர் வடிக்கின்றேன். ஆயிரம் ருபாய் கொடுத்து வாங்க முயன்ற அந்த நாயை பிடித்து உயிரோடு கொளுத்த வேண்டும். காங்கிரஸ் வாழ்க.. மன்மோகன் திட்டங்கள் வாழ்க.. அன்னை சோனியா வாழ்க....
BALA - RIYADH,சவுதி அரேபியா
2010-08-12 13:13:10 IST
குடி குடியை கெடுக்கும் ... குடிகாரர்கள் நாட்டை கெடுக்கிறார்கள் ....... ஆந்திர அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது ...... தண்டனை கடுமையாக்க பட வேண்டும் .......

கருத்துகள் இல்லை: