சனி, 14 ஆகஸ்ட், 2010

தமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு ?

புலிகள் தமிழ்ப்பெண்களை யுத்தஇறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினர்
தேசம்நெற் கூட்டத்தில் முன்னால் பலி ஆதரவாளரான வாசு தகவல்
புலம்பெயர்நாடுகளில் இருந்து அண்மையில் இலங்கைக்குப்போய் வந்தவர்களில் முள்ளிவாய்க்கால் யுத்தம்வரை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தற்போது இலங்கை அரசின் ஆதரவாளர்களாகவும் மாறியிருக்கும் பலர் அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் சொல்கின்ற விடயங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
புலிகள் உச்சத்தில் இருந்தபோது தூக்கிவைத்து கொண்டாடியவர்கள் தற்போது எல்லாப்பழிகளும் புலிகளுக்கே என சொல்லி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் லண்டனின் தேசம் நெற் ஒழுங்கு செய்த கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னால் புலி ஆதரவாளரான வாசு சொன்ன செய்தியொன்று ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல கோபத்தையும் உண்டாக்கியது.
வாசுதேவன் அண்மையில் இலங்கைக்கு சென்று வந்தவர். அவர் அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தார். தமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆமிக்காரன் வந்தால் இதைத்தான் செய்வான். அதை நாங்கள் செய்தால் என்ன தப்பு எனக் கூறி இந்த வன்முறையை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய வாக்குமூலங்களை  இத்தகைய கூட்டங்களில் தெரிவிப்பதோடு நின்றுவிடாது எழுத்து வடிவில் வெளிவரவும் வேண்டும். வாசு போன்றவர்கள் கடந்த காலங்களில் புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கியவர். ரி.பி.சி வானொலியின் அரசியல் நிகழ்ச்சிகளில் முன்னொருகாலத்தில் பங்கெடுத்தவர். பின்பு ரி.பி.சி வானொலிக்கெதிராக செயற்பட்டவர். அவர் தற்போது மேற்படி கூட்டங்களில் புலிகள் தொடர்பான விமர்சனங்களை வைப்பது வரவேற்க்தக்கதாகும்
புலிகளின் தவறுகளுக்கு புலிகளின் ஆதரவாளர்களும் பொறுப்பானவர்கள். அதற்கான பிராயசித்தம் அவர்களே மேற்கொள்ளவேண்டும்.  தமிழ்மக்களின் இன்றைய மோசமான நிலமைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டில் இருந்து புலிபிரமுகர்களும் ஆதரவாளர்களும் தவறக் கூடாது.

கருத்துகள் இல்லை: