சனி, 14 ஆகஸ்ட், 2010

கனேடிய கரையோர கப்பலின் கப்டன் கைது?்

சண் சீ கப்பல் கனேடிய பாதுகாப்பு பிரிவினரின் கடும் பாதுகாப்புடன் பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தில்! கப்பல் கப்டன் கைது?


சட்டவிரோத குடிவரவாளர்களுடன் கனடாவை நோக்கி பயணித்த “சண் சீ” என்ற கப்பல் இன்று காலை பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்றையதினம் கனடாவின் பொருளாதார மைய்யத்தை அடைந்த மேற்படி கப்பலை கனேடிய கரையோர காவல்துறையினரும், கடற்படையினரும் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மாலை கனேடிய கடற்படையினர் வினிபெக் கப்பலில் சென்ற கனேடிய கடற்படையினர் மேற்படி கப்பலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கப்பல் இன்று காலை 6:;00 மணிக்கு பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை அடைந்துள்ளது. 500 சட்டவிரோத குடிவரவாளர்கள், பயங்கரவாதிகளுடன் சென்ற மேற்படி கப்பலின் கப்டன் கனேடிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: