சனி, 14 ஆகஸ்ட், 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக இராணுவப்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு  எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக  இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையிலிருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.
இதில் பொன்சேகா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றபின் ஜெனரல் சரத் பொன்சேகாவின்  இராணுவ தரநிலை வாபஸ் பெறப்படும் என இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளார்

கருத்துகள் இல்லை: