திங்கள், 25 அக்டோபர், 2010

திரிஷாவின் கோபமும் பாலிவுட் மோகமும்



       திரிஷா கமலுடன் நடித்துள்ள மன்மதன் அன்பு விரைவில் வெளியாக உள்ளது. அடுத்ததாக அவர் அஜித்தின் ‘மங்காத்தா’ வில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறதாம். இதனால திரிஷா சந்தோஷமாக இருக்கிறார். என்றாலும் அவரை பாலிவுட் பழைய சங்கதி ஒன்று சங்கடப்படுத்தி வருகிறதாம். 



ராம்கோபால்வர்மா இயக்கிய ‘காட்டா மீத்தா’   படத்தில் திரிஷா நடித்திருந்தது உலகம் அறிந்த விஷயம்.  அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்றும் அந்தப் படத்தின் தோல்வியால்தான் திரிஷாவுக்கு பாலிவுட்டில் அடுத்தப் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை,  அதனாலதான் அவர் மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு திரும்பி வந்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படி கூறப்பட்டுவருவது பற்றிதான் திரிஷா கெட்ட கோபத்தில் இருக்கிறாராம். (கோபமே கெட்டது இதில் கெட்ட கோபம் வேறையா?). 

இது மாதிரியான வதந்திகளை வேண்டும் என்றே பரப்புகிறார்கள் என கூறும் திரிஷா, “காட்டா மீத்தா” படம் ஓடவில்லை என்பது எல்லாம் பொய். அது உண்மையில் நல்ல படம். அதை ராம்கோபால் வர்மா ரொம்பவே சிறப்பாக எடுத்திருந்தார். அந்த படம் பற்றியும், பாலிவுட்டில் அடுத்து நான் நடிக்காதது பற்றியும் தவறான கருத்துக்களை பரப்புக்கிறார்கள்.  

பாலிவுட் எனது கனவு இல்லை.  அங்கு நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது அவ்வளவுதான். ஆனால் எனது இடம் எது என்பது எனக்கு தெரியும். தமிழும் தெலுங்குந்தான் எனக்கான சரியான இடம். இங்குதான் எனக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.”  என கறாராக கூறி சமாளித்தார்.

மேலும் இந்தியில் மறுபடியும் நடிப்பது பற்றி கூறும்போது, “பாலிவுட்டில் சரியான கதாபாத்திரம் அமைந்து அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். நான் விரும்புகிற மாதிரியான நல்ல படம் அமையும் வரை காத்திருப்பேன் ” எனவும் கூறி ஆறுதல் அடைந்தார் திரிஷா. 

கருத்துகள் இல்லை: