புதன், 1 மே, 2019

பொள்ளாச்சி : ஜெயராமன் மகன் பிரவீன் களியாட்டம் | Pollachi Issue | Pollachi


கலைமோகன் - நக்கீரன் : பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த வழக்கு முதலில் பொள்ளாச்சி போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதன்பின் தற்போது சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதியை காவல்துறையினர் பின்பற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி தமிழக அரசு மற்றும் சிபிஐ, சிபிசிஐடி போலீசார் ஜூன் மாதம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை: