வெள்ளி, 3 மே, 2019

திருச்சி பொன்மலை ரயில்வே 300 பேர் .. அனைவருமே வட மாநிலத்வர்கள் .. சென்னை தபாலாபீஸ் வேலை ஆள் எடுப்பிலும் 94% வட நாட்டார்

சாவித்திரி கண்ணன் : நம்பத் தான் முடியவில்லை.திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 300 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் அனைவருமே தமிழரல்லாத வட மாநிலத்தாராம்!
சொந்த மண்ணில் நடக்கும் நிறுவனத்தில் அந்த மண்ணுக்கானவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை எப்படி புரிந்து கொள்வது?
சமீபத்தில் சென்னை தபாலாபீஸ் வேலைக்கான
ஆள் எடுப்பிலும் 94% வட நாட்டார் பணியமர்த்தப்பட்டனர்.அதை,’’ ஏன் இப்படி?’’ என்று தட்டிக் கேட்காமல் விட்டதின் விளவு பொன்மலையில் 100% த்தை எட்டிவிட்டது. மத்திய அரசின் பணி நியமனத்தில்இது போன்ற ஒரு வஞ்சகத்தை மும்பையிலோ,கர்நாடகத்திலோ
பா ஜ க அரசால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியுமா?
அங்கேயெல்லாம் இது போல நடக்காத போது தமிழகத்தில் மட்டும் நடப்பானானேன்?
தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள் என்பதற்காக அடிப்படை தர்மத்தை கூட கடைபிடிக்க மறுப்பதா?
இந்த அநீதியை எதிர்த்து தமிழ் தேசிய இயக்கத்தினர் மே-3 நாளை காலை பொன்மலையில் போராட்டம் அறிவித்துள்ளனர். ஒரு சில அமைப்பினராவது இப்படியான அநீதியை எதிர்க்க முன்வருவது ஆறுதலளிக்கிறது.

கருத்துகள் இல்லை: