ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

சீமானின் அரசியல்.. எக்ஸ்ரே ரிப்போர்ட் .. . வாயில் வந்ததை அடிச்சுவிடு .. பின் கதவால் போயி கலெக்ஷனை வாங்கு

மு.ரா. விவேக் : நம் காலகட்டத்தில் நாம் பார்த்தவரை
பெரியாரையும்,திராவிடத்தையும் !
திமுக கலைஞரை,இன்று அவ்வப்போது தளபதி ஸ்டாலினை!
எவ்வளவு நக்கல்,நையாண்டி,கிண்டல் செய்து சீமான் பேசி வருகிறான்,கடந்த 9 வருடமாய் எவ்வளவோ பொய்கள்,ஆக்ரோஷமான கற்பனை பேச்சுக்கள்.....செய்துகொண்டே தான் இருக்கிறான்!
அவனது பொறுக்கித்தனமான மேடைப்பேச்சுக்கும்,ஊடக பேட்டிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் ,மேடையில் அவனது டார்கெட் அவனது பேச்சு கூட்டத்தின் விசில் சத்தம் மற்றும் கைதட்டல் ஆகியவற்றை பார்த்து பேசுவான்,ஊடகத்தில் மோகத்தை தடவிகிட்டு இத இப்படி பாக்கணும்!,அப்படி பாக்கணும்!-இதை என் அவர்கிட்ட கேக்கல?,இவ்வளவு நாள் என் செய்யல? என்ற ரீதியில் பேச்சு இருக்கும்!
இன்னும் சொல்லப்போனால், குருமூர்த்தி கூட்டம் போல் எதுனா அவன் தம்பிகளால் அல்லது அவன் பேச்சால் சர்ச்சை வந்தால், நாம் தமிழருக்கும் அந்த பிள்ளைகளுக்கும் சம்பந்தம் இல்லை ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பான்!
எம்ஜியார் முதல்வரா இருந்தப்ப பெரியாரை கூப்பிட்டு மேடையில் பாராட்டினார் ன்னு பேச தொடங்கிய பொழுது விசில் அடிச்சு கைதட்டிய கூட்டத்திற்கு முன்பாக, இன்று காத்தான் குடி கலவரத்திற்கு தன்னை கேள்வி கேட்டதாக பொய் பேசி தன் அரசியலை நடத்தி வருகிறான்-அந்த கூட்டமும் எந்த ஒரு அறிவு மயிரும் இல்லாமல் கைதட்டி விசில் அடிச்சுக்கிட்டே இருக்கு!

இவன் பொய் அல்லது கற்பனை இல்லாமல் பேசி மேடை/ஊடக பேச்சுக்களை காண்பது மிக அரிது!
எவ்வளவு தான் இந்த அயோக்கிய மூளைசலவைக்காரனை பற்றி எழுதுவது?
ஒரு முறை மக்கள் மேடை நிகழ்ச்சியில் "நீட்" டை ஆதரித்தும்,தமிழகம் மருத்துவத்தில் மருத்துவ துறையில் எப்படி முன்னோடியாக இருக்கிறது,திராவிடத்தால் எவ்வளவு மருத்துவ கல்லூரிகள் என்ற ரீதியில் ஒரு திமுக காரர் பேசி,பொறுப்பில் இருப்பவர் நாங்கள் சோ பொறுப்பாக பொறுமையாக தான் எதையும் கையாள முடியும் என்று பேசி அமர்ந்த பின்னர் ,மேடையில் இருக்கும் சீமானுக்கு கைதட்டல் அரிப்பு பிடித்து அந்த வாதத்தை மடைமாற்றும் விதமாய்,ஒரு மாபெரும் அறிவிக்கையை!? செய்கிறார்-அதாவது "நீங்க மருத்துவத்தில் முன்னேறியதை எல்லாம் பார்த்தோமே...சேலத்தில் ஒரு புள்ளத்தாச்சி பொண்ணுக்கு எய்ட்ஸ் தோற்று உள்ள ஊசியை போட்டதை" என்று வாய்கூசாமல் பேசுறான்!
கூட்டிட்டு வந்த அவன் குழுவும் விசில் அடிக்குது-ஒரு பொறுப்பற்ற மருத்துவரின் செயலால் நேரத்தை கொடூரத்தை எப்படி மடைமாற்றுறான் பாருங்க!
அடுத்து நேரம் இருந்தால் மானமிகு தமிழ்ப்பிள்ளைகள்,தமிழ்ப்பிள்ளைகள் ன்னு முழங்குறீங்களே பொள்ளாச்சியில் நடந்த கொடூரத்துக்கு அந்த தமிழ்சமூக பிள்ளைகள் தான் காரணம் ன்னு திரும்பி பேசினால் என்ன பதில் சொல்லவீர்!
இதே போல் தான்!
திராவிடம் என்ன அணைகள் கட்டுச்சு ?
திராவிடம் படிக்க வச்சதுன்னா வள்ளுவரை,அவ்வையை,படிக்க வச்சது யாரு!?
திராவிடம் என்ன கிழுச்சிது ?
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை மடைமாற்றி அரசியல் செய்துவரும் பிண யாவரி தான் சீமான்!
படம் எடுத்தான் ?
தோத்தான் ?
நடிச்சான்!
பெரியார் இயக்க மேடைகளில் பேசினான்?
விடுதலை புலிகள் அரசியல் பிரிவு ன்னு சொல்லிக்கிட்டான்!
பொய்யை கையில் எடுத்தான்!
யாவாரம் பிச்சுக்கிட்டு ஓட்டுச்சு!
52 வயசு ஆகுது இவ்வளவு உக்ரமா பொய் பேச எப்படி துணிவு வருதுன்னு பார்த்தா -இவன் கட்சியோட முதல் owner மண்ணெணெய் மபொசி 60 வயசுல இதைவிட மொரட்டா பித்து புடிச்சு அலைஞ்சாரம் அப்ப சரி தான்!
பிறப்பு-1966 இல்
முதல் படம் -1996 இல்!
20 வயதில் சென்னைக்கு வந்திருந்தாலும் 10 வருடத்தில்(30 வயதில்) படம் இயக்கி,கடைசியாக 2008 வரை நேரடியாக சினிமாவில் இயக்குனராக இருந்துவிட்டு பிறகு சில படங்களில் நடித்து....இடையில் "திரைப்பட இயக்குனர் சீமான்" என்று பெருமையாக சில கூட்டங்களில் பேசியது இவ்ளோ தான் வரலாறு!
தகுதி என்ன இருக்குன்னு பேசுற ன்னு கேட்டா?....."கடும் கோபத்தில் இருக்கிறோம்.....ன்னு உடல்மொழி செய்கை செய்து கைதட்டல்!"
இப்போது இறங்குமுகம்......தொடங்கியாச்சு,அவன் உருவாக்கிய முட்டா கூட்டத்தால் தான் அது நடக்க போகிறது.....சதாமுடன் ஓப்பிட்டு தன்னை தானே பேசிக்கொள்கிறான்!
கடாபியின் முடிவு உன் தம்பிகளால் உனக்கு நடக்காமல் பார்த்துக்கொள்!

கருத்துகள் இல்லை: