வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

BBC :1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து,
தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜோங் உன். சீனா வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளி நாடாக இருந்து வருகிறது. பதிவியேற்றதிலிருந்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார் கிம். கிம் மற்றும் மூன்னின் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அமெரிக்காவின் சிஐஏ தலைவராகவும், தற்போது வெளியுறவுச் செயலராகவும் இருக்கும் மைக் போம்பேயோ மற்றும் அதிபர் கிம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் சந்தித்து கைக்குலுக்கிய புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.:39 >தென் கொரிய அதிபர் மூன்னுடன் நல்ல முறையில், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல விளைவுகளை ஈட்டுவேன் என்று கிம் தெரிவித்துள்ளார்< நடைபெறும் விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்த வட கொரிய அதிபர் கிம்முக்கு நான் எனது மரியாதையை தெரிவித்து கொள்கிறேன் என தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்தார்.>ராணுவமற்ற பகுதியில் உள்ள பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்கின்றனர்.

7:00 தென் கொரியாவில் கிம்முக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
"நான் உங்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என மூன் கிம்மிடம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
6:50 அணு ஆயுதங்கள் பயன்பாடை வட கொரியா நிறுத்துவதற்கு தயாராக இருப்பது, இந்த வரலாற்று முக்கியத்துவமான சந்திப்பில் முக்கிய கவனம் பெறும்.
6:40 இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம்மை இருநாட்டு எல்லையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்தார்.
எல்லையில் இருபுறத்திலிருந்தும் கிம் மற்றும் மூம் கைகளை குலுக்கினர்.
எதிர்பார்க்கதாக தருணமாக தென் கொரிய அதிபர் வட கொரிய எல்லைக்குள்ளும் சென்றார்.<>இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் வட கொரியாவின் சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்ய முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் கொரியா தெரிவித்திருந்தது.
2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.
நிகழ்ச்சிநிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள வட கொரிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பு ஒரு முன்னோட்டம் என்றும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: