வெள்ளி, 27 ஏப்ரல், 2018

சென்னை கடற்கரை சாலை டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை?


சென்னை டிஜிபி அலுவலகத்தில், இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் குவிப்புதினத்தந்தி :சென்னை டிஜிபி அலுவலகத்தில், இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #GutkhaScam சென்னை, குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியது. டி.ஜி.பி. மீதான குற்றச்சாட்டு என்பது விசாரணை அளவில்தான் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணையை டி.ஜி.பி. சந்திப்பார் என்றும், அவர் பதவி விலக வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்,  டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இப்போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

கருத்துகள் இல்லை: