திங்கள், 10 ஜூலை, 2017

ஆர்எஸ்எஸ் ஆசிரியர்களின் கால்களை மாணவர்களை கழுவ செய்யும் கொடுமை.. !

பாரதியார் பணியாற்றிய பள்ளி என்ற பெருமையுடைய மதுரை சேதுபதி பள்ளியில் மாணவ மாணவிகளை ஆர்எஸ்எஸ் ஆசிரியர்கள் தங்களின் கால்களை கழுவ செய்து பூசை செய்தனர். இதனை தடுக்க சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இன்று குரு பூர்ணிமா திதியாம் அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 108 ஆசிரியர்கள் சேதுபதி பள்ளியில் ஒன்றிணைந்தனர். அங்கு பயிலும் மாணவ மாணவியர்களை கட்டாயப்படுத்தி வரவழைத்த ஆசிரியர்கள், அவர்களின் கால்களை தாம்புழ தட்டில் வைத்து  தண்ணீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்த செய்திருக்கின்றனர். இதில் இந்த பள்ளிக்குள் மாடுகளை அழைத்து சென்று கோ பூசை, பாத பூசை, கங்கா பூசை உள்ளிட்ட பல்வேறு பூசைகளையும் நடத்தியிருக்கின்றனர்.


இதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த அப்பகுதி இளைஞர்கள் உடனே திரண்டு பள்ளிக்குள் சென்று மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி ஆர்எஸ்எஸ் நபர்களின் கால்களை கழுவ செய்வதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் மாணவிகள் கால்கழுவி விடுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை வாலிபர் சங்கத்தினரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதோடு, கைது செ ய்தனர்.

free wordpress themes

கருத்துகள் இல்லை: