செவ்வாய், 11 ஜூலை, 2017

மீண்டும் பழைய போராட்டக்களமானது நெடுவாசல்!


நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்காக பிப்ரவரி 16ந் தேதி தொடங்கிய
முதல்கட்ட போராட்டம் 22 நாட்கள் திருவிழாவாக நடந்தது. போராட்டத்தை நிறுத்துங்கள் திட்டத்தை நிறுத்துகிறோம் என்று மத்திய, மாநில அரசுகள் தங்கள் பிரநிதிகளாக அமைச்சர்களை அனுப்பியது. அமைச்சர்களும் மாவட்ட நிர்வாகமும் கொடுத்த வாக்குறுதியை நம்பி முதல்கட்ட போராட்டம் 22 நாளில் முடிவடைந்தது. அந்த 22 நாட்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் நெடுவாசலை திரும்பிப்பார்த்தது. மத்திய மாநில அரசுகளை நம்பிய மக்களுக்கு மத்திய அரசின் ஒப்பந்தம் நம்பிக்கை இழக்கச் செய்ததால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் ஏப்ரல் 12ந் தேதி தொடங்கி 91 நாட்களாக நடக்கிறது. இன்றைய போராட்டத்தில் நாம் தமிழர்கட்சி சீமான் கலந்து கொண்டதால் கூட்டம் தாகரித்து மீண்டும் பழைய போராட்டக் களமாகி உள்ளது நெடுவாசல். இன்று முதல் மீண்டும் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று கூறுகிறார்கள். - இரா.பகத்சிங்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: