புதன், 5 அக்டோபர், 2016

அப்ப அல்லோ என்று மலைக்காதே... இப்போதும் அல்லவா சேம் ஸ்டோரி ... ஒரு கதை .... யா ?

அந்த காலத்தில்...ஒரு மன்னன் இருந்தான்...
அவனுக்கொரு சேனாதிபதியம் இருந்தான்..இருவரும் ஒட்டிப்பிறந்த உடன்பிறவா சகோதரர்களாக...சிலகாலம் பழகிவந்தார்கள்
மன்னனின் சபல புத்திக்கு தீனி போட்டு மான்னனை மயக்கி மெல்ல..தன் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டான் சேனாதிபதி.
மன்னருக்கு பல நோய்கள் இருப்பதாக செய்தி பரப்பினான் சேனாதிபதி...
அதை பயன்படுத்திக்கொண்டு...மன்னரை அரண்மனையில் சிறை வைத்தான்...அவருக்கு ராஜ் வைத்தியம் செய்து வருவதாக வெளியே செய்தி சொல்லிவந்தான்...
மன்னரை ஈ எறும்பு கூட நெருங்க முடியாத அளவில் இரகசியமாக தனிமை சிறையில் வைத்திருந்தான்..
மன்னர் நலமாக இருக்கிறார் விரைவில் சபைக்கு வருவார் என்று ..அரசவையில் இருக்கும்நபர்கள் மூலமாக செய்தி சொல்லிவந்தான்...
சேனாதிபதியின் கனிவான சேவையில் மன்னர் சுகமாக இருப்பதாகவே மக்கள் நம்பினார்கள்.
அதற்கு பின்னால் சேனாதிபதி நினைத்ததே நடந்தது...
" தனக்கு பிறகு என் உடன் பிறவா சகோதரன் சேனாதிபதியே இந்த நாட்டை ஆளவேண்டும் "" என்று மரண சாசனம் எழுதி ஒப்பம் இட்டதாக ஒரு மடல் வாசிக்க பட்டது...மக்கள் அதை நம்பினார்கள்.
சேனாதிபதி நாட்டுக்கு மன்னர் ஆனார்....
அது அப்போ அல்லோ என்று மலைக்காதே...
இப்போதும் அதே கதைகள் நடக்கிறது...நம்மை சுற்றி...
முகநூல் பதிவு : Damodaran Chennai

கருத்துகள் இல்லை: