செவ்வாய், 4 அக்டோபர், 2016

காஞ்சிபுரத்தில் சங்கரராமன் மகள் போட்டி.. காஞ்சி ஜெயேந்திரர் சங்கரராமன் கொலைவழக்கில்.....

மின்னம்பலம்,காம் : காஞ்சிபுரத்தில் கொல்லப்பட்ட சங்கரராமனின் மகள் மைத்ரேயி அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் போட்டியிடுகிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக பணியாற்றி வந்தவர் சங்கரராமன். இவர் 2004-ம் ஆண்டு கூலிப்படைகளால் கொல்லப்பட்டார் இந்தக் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சந்தேக நபராக சேர்க்கப்பட்டார் பிரள் சாட்சிகளால் குற்றம் நிரூபணமாகமல் போக அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலையானார். சங்கரராமன் குடும்பத்து நீதி கிடைக்காமல் போனதாக அவரது குடும்பத்தினர் வருத்த்தம் தெரிவித்த நிலையில் , சங்கரராமனின் குடும்பம் அதிமுக கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், இப்போது நடைபெறும் உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தலில் சங்கரராமனின் மகள் மைத்ரேயி, காஞ்சிபுரம் நகராட்சியின் 40-வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கருத்துகள் இல்லை: