புதன், 5 அக்டோபர், 2016

பொள்ளாட்சி ஜெயராமனின் மகன்: தோழி பலி: 7 பேர் படுகாயம்

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீண், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் திலக், சுரேகா, மாந்திரா, சுவாதி மற்றும் பெரிய நாயகி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மாலை கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்றார். அவினாசியை அடுத்த பெருமாநல்லூரில் ஆதியூர் பிரிவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பையும் தாண்டி, ஈரோட்டிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுரேகா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீண் உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்து திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறிதது பெருமாநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.;அருள்குமார்   .. நக்கீரன்,இன் ;

கருத்துகள் இல்லை: