செவ்வாய், 4 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பா: ஓரிரு நாட்களில் முதல்வரின் உடல்நிலை குறிந்து .. நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு ...


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஓரிரு நாட்களில் வெளிப்படையாக கூறாவிட்டால் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறினார். முதல்வர் குறித்த புகைப்படத்தையோ, வாட்ஸ்-அப்பில் ஒரு அரை நிமிடம் பேசும்படியான வீடியோவையோ வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்றும் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
காமராஜரின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா புஷ்பா எம்பி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: