வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஜெ’சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வருகிற 18-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதன் முதலாக,தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரைமுதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 -ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூருசிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார். இதையொட்டி சிறைக்குச் சென்றஜெயலலிதா, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்தஉத்தரவுக்கு எதிராக கர்நாடகா அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா அவர் தன் வாழ்வு பற்றி சுயசரிதை ஒன்றை எழுதினார்.
அந்த சுயசரிதையில், சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எழுதியிருந்தார். “சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’என்று குறிப்பிட்டிருந்தார். நூலின் இந்த பகுதி பெரும் விவாதங்களைக் கிளப்பியது.இந்நூலை மேற்கோள் காட்டி தமிழகத்தைச் சார்ந்த பி.ரத்னம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் “‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யாஆஜரானபோது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணைநடத்த வேண்டும். இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாராஎன்பதையும் விசாரிக்க வேண்டும். அவர், தனது புத்தகத்தில் கூறியுள்ள புகார்கள்,குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ரத்னம் தாக்கல்செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகிசந்திர கோஸ், அமிதவா ராய்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்தனது வாதத்தை முன்வைக்க வந்தார். ஆனால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையைஒத்திவைக்க காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்விஎழுப்பினார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டுவழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்குவிசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.நீதிபதிகள் குறிப்பிட்ட நான்கு வாரங்கள் முடிந்து விட்டது. நேற்று மாலை வெளியான உச்சநீதிமன்ற வழக்கு பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கு விபரம் எதுவும் இல்லை. இந்நிலையில் வருகிற 10 –ம் தேதி தொடங்கி 15-ம் தேதியான சனிக்கிழமை வரை தசரா விடுமுறை நீதிமன்றங்களுக்கு விடுமுறை காலம் ஆகும். 17 –ம் தேதி நீதிமன்றம் தன் அலுவலை மீண்டும் துவங்கும் போது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் எனத் தெரிய வரும். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி நேற்று அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ நிர்வாகம் அவர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. minnambalam,com

கருத்துகள் இல்லை: