புதன், 23 அக்டோபர், 2013

ராகுல் காந்திக்கு Victim Syndrom பாதிப்பு உள்ளதா ? இப்ப போயி பாட்டி மரணம் அம்மா பாவம் எல்லாம் பேசுகிறார் ?

பாட்டி, தந்தை போன்று நானும் ஒருநாள் கொல்லப்படலாம், ஆனால் அதுபற்றி எனக்கு கவலை இல்லை’’ என்று ராஜஸ்தான் தேர்தல் பிரசார
கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சில தினங்களாக பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். வேறு
வழியின்றி ராகுல் அவ்வாறு பேசுவதற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பா.ஜனதா கட்சியின் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- ராகுல் தனது பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டது, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதது குறித்து பேசியிருக்கிறார் என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்களின் வாக்குகளை கவர அவர் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். நாட்டிற்கு நன்றாக தெரிந்த காந்தி குடும்பத்தின் தியாகங்களைப் பற்றி மீண்டும் புகழ் பாடுவதை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்துள்ளார்.   கடந்த காலத்தை பற்றிய ராகுல் காந்தியின் உணர்ச்சிப் பூர்வமான பேச்சுக்களும், சுய புராணங்களும் இன்றைய காலத்து இளைஞர்களிடம் எடுபடாது. அவர்கள் வருங்கால இந்தியாவை படைக்கும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  maalaimalar.com

கருத்துகள் இல்லை: