ஞாயிறு, 20 அக்டோபர், 2013

மும்பையில் கடத்தப்பட்ட காதலியின் வாயில் ஆசிட் ! ஆபத்தான கட்டத்தில் பெண் ! காதலன் கைது


In a one-sided love affair, an 18-year old girl became the victim of a brutal acid attack on Saturday,
A resident of Kajupada area, the girl was abducted by Jitendra while she was on her way to college.
Jitendra took the girl to Malad’s Gorai beach where he first assaulted her and then poured acid on her face.
மும்பை தாஹஷர் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரா சக்பால் (வயது 20).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை அவர் காதலிக்க தொடங்கினார். ஆனால், அந்த பெண் ஜிதேந்திராவை காதலிக்க மறுத்து விட்டார்.
இதனால் அவர் அந்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து தொந்தரவு செய்தார். அவரையும், அவரது தந்தைதையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜிதேந்திராவை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் மும்பை புறநகர் பகுதியான கோரை கடற்கரை பகுதியில் அந்த பெண்ணின் வாயில் ஜிதேந்திரா ஆசிட்டை ஊற்றி கடலில் தள்ளினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜிதேந்திராவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் முகம் 10 சதவீதம் எரிந்து விட்டதாக போலீஸ் அதிகாரி மகேஷ் பட்டீல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. malaimurasu.com

கருத்துகள் இல்லை: