சனி, 26 அக்டோபர், 2013

பயணி தவறவிட்ட 5 லட்சத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஜெயேஷ் பாட்டீல்

Jayesh Patil, 27, ferried a middle-aged woman and her child to Naigaon station. The woman was in a hurry to board the train. As she hopped out of the auto, she forgot to take the bag containing 10 tola gold chain, 2.5 tola chain and three gold rings and her cell phone which are collectively worth Rs5 lakh. “The woman was in a hurry as she wanted to reach the venue of her sister’s marriage in Mumbai. As I left the station, her cell phone began to ring. Then, I noticed the bag. I opened it to find the phone and the jewellery,” said Patil. The woman realised on the platform that she had left behind her bag. She panicked and then went to a public telephone booth and dialled her cell phone number. When the phone started ringing, Patil saw the forgotten bag. He opened the bag and picked up the call. He told the woman to collect the bag from Naigaon auto stand. “My parents taught me to earn in a respectable manner. I teach the same to my kids,” he added.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பெண் பயணி விட்டுச்சென்ற தங்க நகைகள் வைத்திருந்த பையை திரும்ப ஒப்படைத்தார். வசாய் அடுத்த நைகாவ் பகுதியைச் சேர்ந்தனர் ஜெயேஷ் பாட்டீல் (27), ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம், நடுத்தர வயது கொண்ட பெண் தனது குழந்தையுடன், வசாய் அடுத்த நைகாவ் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சவாரி செய்தார். நைகாவ் ரயில் நிலையம் அருகே வந்ததும் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், அந்த பெண் தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு சென்று விட்டார். அந்த பையில் 10 சவரன் நகை, 2.5 சவரன் செயின், 3 தங்க மோதிரங்கள் மற்றும் செல்போன் ஒன்றும் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ^5 லட்சம். அந்த பெண் பயணி கீழே இறங்கியதும், ஆட்டோவை கிளப்பினார் டிரைவர். சிறிது தூரம் சென்றதும் பையில் இருந்த செல்போன் ஒலித்தது. டிரைவர் ஜெயேஷ் திரும்பி பார்த்தபோது, பின்புற இருக்கையில் பை ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, நகைகளும் செல்போனும் இருந்தது.
செல்போனை கையில் எடுத்து பேசினார். எதிர்முனையில், பையை தவறவிட்ட பெண் பேசினார்.ரயில்வே பிளாட்பாரத்துக்கு சென்ற பிறகு, அந்த பெண்ணுக்கு பை பற்றிய நினைவு வந்திருக்கிறது. உடனடியாக, அருகிலிருந்த பொது தொலைபேசியில் இருந்து செல்போனுக்கு கால் செய்திருக்கிறார். செல்போனை எடுத்த ஆட்டோ டிரைவர், நைகாவ் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து பையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அந்த பெண் வந்த பிறகு பையை அதிலிருந்த தங்க நகைகளுடன் பத்திரமாக ஒப்படைத்தார். ஜெயேஷ் பாட்டீலின் நேர்மையை அங்கிருந்த அனைவரும்¢ பாராட்டினர்.இதுதொடர்பாக, ஆட்டோ டிரைவர் ஜெயேஷ் கூறுகையில், “நேர்மையான வழியில் மட்டுமே சம்பாதிக்குமாறு, எனது பெற்றோர் எனக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். எனது குழந்தைகளுக்கும் அதையேதான் கற்றுத் தருகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: