வியாழன், 24 அக்டோபர், 2013

செம்மீன் புகழ் ஹிந்தி பாடகர் மன்னாடே காலமானார் ! மானசமயிலின் வரு


இந்திய திரையுலகின் பிரபல பாடகர் மன்னா டே 94-வது வயதில் பெங்களூரில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
திரைப்படங்களில் பாடியதன் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை இவர் கொண்டிருந்தார்.
இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் சுமார் நாலாயிரம் பாடல்களை பாடியுள்ள மன்னா டே, கிட்டத்தட்ட 7 தசாப்தங்களாக இந்தி திரையுலகில் பிரபலம் பெற்ற பாடகராக விளங்கினார்.
தனது வசீகரக் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த ஒரு இசை மேதையின் மரணம் நாட்டுக்கு பேரிழப்பு என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற மன்னா டே 1942-ம் ஆண்டில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவரது திரையிசைப் பாடல் ஆல்பங்கள் தலைமுறைகள் தாண்டி அதிகளவில் விற்றுத்தீர்த்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: