ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சவூதி: இலங்கை பெண்களை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைக்கு தடை

இலங்கைப் பணிப்பெண்களை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை சவூதி அரேபிய அரசாங்கம் நாளை அறிவிக்கவுள்ளது. இலங்கையரசுக்கும் சவூதிக்குமிடையில் பணிப்பெண்களின் ஊதியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஏற்பட்ட முறுகல்நிலை காரணமாக இந்தநிலைப்பாட்டை சவூதி எடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தோனேசிய பெண்களை பணிக்கு அமர்த்துவதால் எவ்வித பிரச்சினையும் இல்லையென கருதியுள்ள சவூதி அதிகாரிகள் அதனைத் தொடர எண்ணியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: