ஞாயிறு, 10 அக்டோபர், 2010

பாக்.: 30 அமெரிக்க இராணுவ லாரிகளுக்கு தீ வைப்பு

ஆப்கானில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவத்துக்கு தேவையான பெட்ரோலை ஏற்றிக்கொண்டு சென்ற 30 அமெரிக்க லாரிகளை தீவிரவாதிகள் தீ வைத்துக் கொளுத்தினர்.

ஆப்கானிஸ்தானுக்கு செல்வதற்காக புறப்பட்ட இந்த லாரிகள், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிபி என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அப்போது அங்கு வந்த 20 க்கும் அதிகமான தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை லாரிகள் மீது வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் லாரிகளை தாக்கினார்கள்.

இந்த தாக்குதலில் 30 லாரிகள் தீயில் எரிந்து சாம்பாலாயின.

கருத்துகள் இல்லை: