புதன், 20 அக்டோபர், 2010

சிங்கள மக்களிற்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் வழங்கப்படும்!

யாழ் புகையிரதநிலையத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள சிங்கள மக்களிற்கு விரைவில் காணிகள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை சந்தித்தபோதே இதனை அவர் தெரிவித்துள்ளதுடன். யாழ்ப்பாணத்தில் இவர்களிற்குரிய காணிகளை வழங்குவதற்குரிய சட்டநடவடிக்கை நிவர்த்தியடைந்ததும் இவர்களுக்கு அரச காணிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: