சனி, 23 அக்டோபர், 2010

446 தேசிய அடையாள அட்டைகள் மீட்பு..!தெரணியகல காட்டுப் பகுதியில


கம்பஹா மாவட்டம் தெரணியகல நக்காவிட்ட பிரதேசத்தில் கற்குழி ஒன்றுக்குள் மக்கிப்போன நிலையிலிருந்த 446 தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுக்குத் தேன்சேகரிக்கச் சென்ற நபரொருவர் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகளில் 303அ. அட்டைகள் முற்றாக மக்கி விட்டன. அவற்றலிருந்து விவரங்களைப் பெறமுடியவில்லை. 86 அட்டைகளில் உரியவரின் பெயரும், முகவரியும், இலக்கமும் தெரிகின்றது. 57 அட்டைகளில் இலக்கங்கள் மட்டுமே தெரிகின்றன. இந்த அடையாள அட்டைகள் பொத்தெனிகந்த, நக்காவிட்ட, மாலிபொட, மியனவிட்ட மற்றும் யட்டிவல பிரதேசவாசிகளுக்குச் சொந்தமானவை. 1989 ம் ஆண்டு ஜே.வி.பியினரால் சேகரிக்கப்பட்டவை என்று தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: