சனி, 23 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் புளொட் சித்தார்த்தன்!

நல்லிணக்க ஆணைக்குழு முன் புளொட் தலைவர் சித்தார்த்தன் எதிர்வரும் திங்கள்கிழமை சாட்சியமளிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இடம்பெற்று முடிந்த யுத்தத்தின்போது எற்பட்ட மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகம், இலங்கை அரசுமீது பலத்த கண்டனங்களை செலுத்தியுள்ள நிலையில், உலகை ஏமாற்றும் நோக்குடன் மஹிந்த அரசினால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரிடமும் கருத்துக்கள், முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஆனந்தசங்கரி போன்றோரின் கருத்தினை அறிந்ததுடன், மட்டக்களப்பு, வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் அறிந்துவரும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கருத்துக்களை அறியவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: