ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

படப்பிடிப்புக்கு தாமதம், ஓயாமல் போனில் பேச்சு நயன்தாரா பற்றி பரவும் வதந்திகள்

பிரபுதேவா காதல் நயன்தாரா நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.
 
கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார். படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். இயக்குனர்கள் சீன்களை எடுக்கும் போது பிரபுதேவாவுடன் டெலிபோனில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன.
 
இதனால் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. கன்னட பட மொன்றில் சிவராஜ்குமாருடன் ரூ.1 கோடி சம்பளத்தில் நடிக்க சமீபத்தில் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிக்க முடியாது என உதறி விட்டார் நயன்தாரா.
 
பிரபு தேவா யோசனைப்படி இந்த படத்தை தவிர்த்ததாக கூறுகின்றனர்.
 
ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்புக்கும் ஒழுங்காக வராததால் அந்த படம் தாமதமாக பேசப்பட்டது.
 
இது குறித்து பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
 
நயன்தாரா படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். ஓயாமல் போனில் பேசுகிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள். நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர். படப்பிடிப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மேக்கப்புடன் வருவார். படப்பிடிப்பு நடக்கும் போது அவர் போனில் பேசுவது இல்லை. எங்களுடன் கதை விவாதத்தில் கூட கலந்து கொண்டார்.
 
பாஸ் என்கிற பாஸ்கரன் நடத்தர குடும்பத்தை பற்றிய கதை. யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து இப்படத்துக்கு தேர்ந்தெடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: