புதன், 19 டிசம்பர், 2018

பொன் மாணிக்கவேல் : என்மீது குற்றம் சொல்பவர்கள் ஒரு சிலை திருட்டையும் கண்டு பிடிக்காதது ஏன்? இது பகுதியினரும் பரஸ்பரம் பேட்டி விடியோ


tamil.samayam.com சிலை கடத்தல் பிரிவில் தனிஆளாக போராடுகிறேன்- பொன். மாணிக்கவேல் உருக்கம்" சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன் மீது கொடுத்த புகார் தொடர்பாக, சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.i>புகார் தொடர்பாக அதிகாரிகள் எப்.ஐ.ஆர் பதியாத போது, பணிச்சுமை எப்படி இருக்கும் என பொன். மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
தன் மீது புகார் அளித்த காவலர்கள் இதுவரை ஒரு முதல் தகவல் அறிக்கையையும் பதியவில்லை, புகார் கூறியவர்கள் ஒருமுறை கூட பணி மாறுதல் கோரவில்லை என பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் காவலர்கள், சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது இன்று டிஜிபி-யிடம் புகார் அளித்தனர். பொன். மாணிக்கவேல் தலைமையிலான பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருகக்கு பணிக்காலம் முடிந்துவிட்டதால், அவர்களை திருப்பு அனுப்பினார் அவர்.

இது தொடர்பாக டிஜிபி-யிடம் புகார் அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த காவலர்கள், தான் சுட்டிக்காட்டும் நபரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என பொன்.மாணிக்கவேல் கூறுகிறார். எங்களை சுதந்திரமாக பணி செய்ய பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. சிலைக்கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலின் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றினோம். பொய் வழக்கு, பொய் சாட்சியங்களை கைது செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் மிரட்டுகிறார் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: