ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

சமுக ஆர்வலர் பாத்திமா மரணம் .. ட்ராபிக் ராமசாமியின் உதவியாளர் .

tamilthehindu : டிராபிக் ராமசாமியின் உதவியா ளர் பாரதி என்கிற பாத்திமா (45) திருச்சி தனியார் மருத்துவ மனையில் நேற்று காலமானார்.
கும்பகோணம் அருகே உமை யாள்புரம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் பாரதி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கண வனை பிரிந்த பாரதி, வெளி நாட்டுக்கு சென்றார். அங்கு தன்னுடைய பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்.
பின்னர், கும்பகோணம் திரும் பிய அவர், சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் உதவியாளராகி, அவரது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி யில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் பெற்றார்.
அதன்பிறகு, டிராபிக் ராமசாமி யுடன் இணைந்து தமிழகம் முழு வதும் சாலைகளில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்றுவது, மணல் கொள்ளைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
மாலைமலர் : டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா திருச்சி
மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் கடந்த 8 ஆண்டுகக்கு மேலாக உதவியாளராக இருப்பவர் பாத்திமார்.

இவர் கடந்த சில நாட்களாக உடல் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்ர்று மருத்துவமனையில் உயிரிழந்தார். பாத்திமாவின் உடல் அவரது சொந்த ஊர் உமையாள் புறத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
2015ம் ஆண்டில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வ்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட முதலில் ப்த்தாமாவை தான் வேட்பாளராக அறிவித்திருந்தார் டிராஃபிக் ராமசாமி. அப்போது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. தர்மராஜன், ஆர்கேநகர் தொகுதியில் நிற்கக் கூடாது என்று பாத்திமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது.
அதன் பிறகே டிராஃபிக் ராமசாமி போட்டியிட்டார். அதே ஆண்டு பாத்திமா சென்ற கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: