சனி, 8 செப்டம்பர், 2018

பிக்பாஸ் 2 தமிழ் செட்டில், ஏசி மெக்கானிக் மரணம் ! சந்தேகப்பட முகாந்திரம் ?

 பிக் பாஸ்: ஊழியர் மரணம்!மின்னம்பலம் : கமல் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சீஸனுக்கான படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பலர் இதில் பணியாற்றிவரும் நிலையில் அரியலூர் மாவட்ட மாத்தூரைச் சேர்ந்த குணசேகரன் எனும் நபர் இங்கு ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் தங்கியிருந்த அறையின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறை சார்பில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் குளிர்சாதன பராமரிப்பு செய்து வந்த மெக்கானிக் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை அருகே உள்ள பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ‘பிக்பாஸ்2’ ரியாலிட்டி ஷோவுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக பல தொழிலாளர்கள் ஸ்டூடியோவில் தங்கி இரவுப் பகலாக வேலை செய்து வருகின்றனர். அப்போது குளிர்சாதன வசதிகளை பராமரிப்பு செய்து வரும், குணசேகரன் (30) என்பவர், சாப்பிட்டு விட்டு நேற்று கை கழுவ இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கியிருந்து தவறி கீழே விழுந்தார். அருகிலிருந்து மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு குணசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சமயம் .காம்

கருத்துகள் இல்லை: