வெள்ளி, 7 செப்டம்பர், 2018

திமுக மேடையில் உதயநிதியின் படம் ... அருவருப்பாக இருக்கிறது .. தொண்டனின் மனக்குமுறல் ... தவறு இனி நடக்காது உதயநிதி டுவீட்

tamilthehindu :திமுக கட்சிபேனரில் எப்படி உங்கள் படம் உள்ளது என்ற கேள்விக்கு சாதாரண ட்விட்டரை மதித்து இனி அப்படி நடக்காது என்று உதயநிதி பதில் அளித்துள்ளார். அதை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
மு.க.ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி திமுக கட்சிக்கூட்டங்களில் பங்கேற்கிறார். ஆனால் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. முரசொலி அறக்கட்டளையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் 1965-ல் கட்சியில் இணைந்தாலும் அவருக்கு பொறுப்புகள் பல ஆண்டுகளுக்கு பின்னரே வழங்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கூட 19 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. திமுகவின் மூன்றாம் தலைமுறை கருணாநிதியின் வாரிசாக உதயநிதி முன்னணியில் நிற்கிறார். சினிமா நடிகராக உதயநிதி பிரபலமாகி உள்ளார். நவீன சோஷியல் மீடியா தளத்தில் உதயநிதி பிரபலாமாக உள்ளார். உதயநிதியை கட்சியில் வரவேற்றும் வரக்கூடாது என்றும் இருவித கருத்துகள் நிலவுகிறது.
சமீபத்தில் நடந்த ஒரு திமுக நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனரில் கருணாநிதி ஸ்டாலின் படத்துடன் உதயநிதி படத்தையும் போட்டுள்ளதை மேற்கோள் காட்டி ஷாமுராய் என்பவர் பதிவிட்டிருந்தார்.

“Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா? முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு அவரது பதிவில் கவிதா என்பவர் “அதை போர்டை மேடையில் வைத்தவர்களை கேட்க வேண்டிய கேள்வி அவரது கவனத்திற்கு வந்திருக்காது” என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஷாமுராய் என்பவர் “எப்படி கட்சி காலில் விழும் பழக்கம் வேண்டாம், பிளக்ஸ் பேனர் வேண்டாம் ன்னு தனி அறிக்கை கொடுத்ததோ அதே மாதிரி தலைவர்கள் படம் தவிர்த்து, மற்றவர்கள் (உதயநிதி) படம் வேண்டாம் ன்னு அறிக்கை கொடுக்கனும். செய்வார்களா? நாங்கள் சுயமரியாதை கட்சியில் இருக்கிறோம். ஒழுங்கு நடவடிக்கை வேண்டும்.” என்று பதில் பதிவிட்டிருந்தார்.
ச.ஜெய்‏ @ekbjLrP33xwQm என்பவர் பதிவில் “ குடும்ப அரசியல் என்ற ஒற்றை காரணத்தினாலேயே 2011 தேர்தலில் கழகம் தோற்றது,தலைவர் கலைஞருக்கு பிறகு சரியான தகுதியுள்ள தலைவராக தற்போது தளபதியை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.மீண்டும் குடும்ப அரசியல் தொடருமானால் கழகம் மீண்டெழுவது சத்தியமாய் சாத்தியமல்ல.” என்று பதிலளித்துள்ளார்.
இந்த ட்விட்டை மதித்து உதயநிதி ஸ்டாலின் பெருந்தனமையுடன் பதிலளித்துள்ளார். அவரது பதிலில் ஷாமுராய் பதிவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு
Udhay‏ @Udhaystalin
“தவறு! மீண்டும் நடக்காது!” என்று பதிலளித்துள்ளார்.
K.Muthu‏ @KMuthusaidai இதற்கு முத்து என்பவர் “இப்போது திமுகவை குறை சொல்ல துடிப்பவர்களின் முக்கிய டார்கெட்டாக நீங்கள் தான் இருக்கிறீர்கள். உங்கள் செயல்களை எதிரிகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். மிகுந்த கவனம் தேவை!” எனவும்
கதிர் என்பவர் பதில் ட்வீட்டில்:
Kathir‏ @kathirela79 54m “நன்றி உங்கள் பதிலுக்கு. திமுக சுயமரியாதை தொண்டர்கள் உள்ள கட்சி அதனால் தான் இங்கே தொண்டர்கள் தலைவரின் மகன் என்றும் பாராமல் கேள்வி கேட்கிறார்கள். நீங்களும் உ கள் தந்தையை போல கட்சிக்காக உழைத்தால் உகளுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.”
என்றும் பதிலளித்துள்ளார்.
அரசியலின் பரிமாணங்கள் காலத்துக்கு காலம் மாறுகிறது. அதற்கேற்ப தலைவர்களும் விமர்சன தளங்களும் மாறுகிறது. தற்போதைய முன்னேற்றத்தில் உதயநிதி போன்ற இளம் தலைமுறையினர் உடனடியாக இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதும், அதற்கு பதிலளிப்பதும் வரவேற்கத்தக்கதே.

கருத்துகள் இல்லை: