சனி, 8 செப்டம்பர், 2018

குட்கா ஊழல் போலீஸ் ஜோர்ஜ் .. சட்டவிரோதமாக கலைஞரை கைது செய்து நேரடியாக ஜெயாவுக்கு ஒளிபரப்பிய கமிஷன் அடிமை

இந்த ஜார்ஜ் .. கலைஞர் அலறும் சத்தத்தை நேரடியாக ஜெயாவும் சசியும்
கேட்டு ரசிக்க  ஒலிபரப்பியதை_ மறக்கமுடியுமா???
Kalidasan Swaminathan :  என்னை குறிவைத்து தாக்குகின்றனர்...
Image may contain: 2 people, textமுன்னாள்  காவல்துறை ஆணையர் ஜோர்ஜ் . 30.6.2001-ம் தேதியன்று அதிகாலையில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேம்பாலஊழல் என்னும் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்
நடந்த நிகழ்வுகளை #ஜூனியர்விகடனும்_நக்கீரனும் ஸ்பெஷல் காவரேஜ் செய்து கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.
ஜூன் 30... பொழுது விடிந்து சூரியன் உதிக்கும் நேரத்தில், கீழ்ப்பாக்கம்
டெய்​லர்ஸ் ரோடு!
நீதிபதிகள் குவார்ட்டர்ஸில் பிரின்சிபல் செஷன்ஸ் ஜட்ஜ் அசோக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் படை சூழ... தள்ளாடியபடி வெளியில் வந்த
கலைஞ​ரிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அருகில் நின்று இருந்த மகள் கனிமொழி வாய்விட்டுக் கதற, அவரை சமாதானப்படுத்திவிட்டு நம்மிடம் பேசினார் கலைஞர்.

< ''இரவு 2 மணி தாண்டி இருக்கும்... ஆலிவர் ரோட்டில் உள்ள என் வீட்டின் வெளிப்புறம் பெரிய வெடிச் சத்தம் கேட்டதுபோல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்தேன். என்னைச் சுற்றி 13 போலீஸ் அதிகாரிகள். ஏன் வந்தார்கள்... எப்படி வந்தார்கள் என்று புரிந்துகொள்ளும் முன்பே, 'நீங்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள்... உடனே கிளம்புங்கள்!’ என்றார் காவலர்களுக்கு தலைமை தாங்கி வந்த போலீஸ் அதிகாரி சாரங்கன்.
லுங்கியில் இருந்த எனக்கு சட்டை மாட்டிக்கொள்ளக்கூட மிகக் குறைந்த அவகாசமே கொடுத்தார்கள்.
வேட்டை​யாட வந்த மிருகங்கள்போல என்னைச் சூழ்ந்துகொண்டு குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றார்கள்.
என் மீதும் மத்திய அமைச்சர் மாறன் மீதும் நடந்த தாக்குதல்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை...'' - கலைஞர் சொல்லி முடிப்பதற்குள், அவரைச் சுற்றி நின்ற போலீஸ் படை அந்த குவார்ட்டர்ஸ
கலைஞருக்கு 'வர்டிகோ’ தொந்தரவு இருப்பதால் அவரால் தொடர்ந்து 10 நிமிடங்கள் நிற்பதுகூட இயலாத காரியம் என்று அவருடன் சென்ற அவரது குடும்ப டாக்டர் #கோபால் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
கழுத்து வலி, முதுகு வலி ஆகியவையும் கலைஞரை வாட்டுவதாக நீதிபதியிடம் சொன்னார்.
''அதற்காக பட்டு மெத்தையில் வைத்தா பராமரிக்க முடியும்?'' என்று பக்கத்திலேயே நின்றிருந்த போலீஸ் அதிகாரி #ஜார்ஜ் கமென்ட் அடிக்கிறார்
துடித்துப்போய் அவரை ஒரு கணம் பார்த்தாராம் கலைஞர்.
தலைவர்கலைஞர் கைதின் போது இரண்டு அதிகாரிகள் அலைபேசி
ஆன் நிலையில் இருந்தது
ஒருவர் #முத்துகருப்பன்
இன்னொருவர் இந்த #ஜார்ஜ்
அவர் அலறும் சத்தத்தை நேரடியாக #ஜெயாவும்_சசியும் கேட்டு ரசிக்க நீங்கள் #ஒலிபரப்பியதை_மறக்கமுடியுமா???

கருத்துகள் இல்லை: