சனி, 8 செப்டம்பர், 2018

ஜோர்ஜ் :நான் கிறிஸ்தவன் என்பதால் பழி வாங்கப்படுகிறேன் ! திருவனந்தபுரம் செபஸ்டியன் ஜோர்ஜூ சேட்டன்

Sivakumar Nateshan : தன் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக கடவுளை துணைக்கு
அழைத்து வரும் காவிகளுக்கும் உனக்கும் ஏதும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லையே மிஸ்டர் ஜார்ஜ். >
நீங்கள் குற்றமற்றவர் என்றால் ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே உண்மையை சொல்லியிருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு இன்று சிக்கிக்கொண்ட பிறகு நான் கிறிஸ்துவன் பொய் சொல்லமாட்டேன் என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
ஜல்லிகட்டு...  செபஸ்டியன் ஜோர்ஜ் வன்முறை
ஜெயலலிதா ஆணைக்கினங்க கலைஞரை நள்ளிரவில் கைது செய்த போது நீங்கள் கிறிஸ்தவர் என்பது மறந்து போனதா..? அந்த வழக்கில் உங்கள் நேர்மை நிலைநாட்டிய நீதி என்ன..? ஜெயலலிதா என்ன இறை தூதரா.? அவர் சொன்னால் அப்பீல் இன்றி செய்ய..?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலவரமாக மாற்றிய போது தெரியவில்லையா நீங்கள் கிறிஸ்தவர் என்று..? 
உங்கள் தவறுகளை கிறிஸ்து மன்னித்து விட்டாரா..? அது எப்படி பரிகாரம் இல்லாமல் இறைவன் மன்னிப்பார்... உன் தரப்பு நியாயத்தைக் கேட்டால் ராஜேந்திரனுக்கும் சேர்த்து வக்காலத்து வாங்கி உனக்கு கீழ் நிலை அதிகாரிகளை போட்டுக்கொடுக்கிறாய். அப்படியே உன்னை இயக்கியவர்களையும் காட்டிக்கொடுத்து விட்டு சி.பி.ஐ. தரப்பு சாட்சியாக மாறி விடு. தண்டனையாவது குறையட்டும்.
உங்களை போன்ற இழி பிறவிகளால் தான் மதமே மாசு படுகிறது. மனிதம் தூசு படிந்து போனது. திருந்துங்கடா..! மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டால் யோக்கியனாகி விட முடியாது ஜார்ஜ்..!!

கருத்துகள் இல்லை: