செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சோபியா .. இறந்து போனவர்களின் கடைசி குரல் ... பாரதிராஜா .. ரஞ்சித் ....

மின்னம்பலம்: மாணவி சோபியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சமூக
வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் திரைத்துறையினரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சோபியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய திரைத்துறையினரின் கருத்துகள்:
இயக்குநர் பாரதிராஜா
“என் இனிய சகோதரி தமிழிசைக்குப் பாசத்துடன் பாரதிராஜா,
நீங்கள் தமிழக பிஜேபியில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். தேசிய சிந்தனையுடைய இலக்கியவாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காக நாங்களெல்லாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நீங்கள் பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். பல இடங்களில் நான்கூடக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நாம் எதிரி என்று சிலரை நினைப்போம், நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல. கருத்துவேறுபாடு, ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது.

உங்கள் விமானப் பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா தாய் மண்ணை விட்டு பிரிந்து வாழ்வியலுக்காகக் கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து புகுந்த மண்ணின் பெருமையும் காத்தவள். தான் பிறந்த மண்ணில் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவம் அவளை எவ்வளவு பாதித்திருக்க வேண்டும். அந்த வேதனையில் அந்த உரிமையில் அவர் ஒரு தமிழச்சியாகத் தைரியமிக்க தமிழச்சியாகத் தமிழிசைக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுத்திருப்பாள். நீங்க உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி அவளைச் சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?
அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான விஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை. நீங்கள் எங்களில் ஒருவராக இல்லாமல் வேறொரு பெண்ணாகவே பார்க்க முடிகிறது. மன்னிக்கணும். அந்தப் பெண்ணைப் பற்றி முறையிட்ட வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது."
இயக்குநர் பா.ரஞ்சித்
ஜனநாயகத்தின் குரல் #sophia #தமிழகஅரசே_விடுதலைசெய்...
பழனி பாரதி
"பாசிச பாஜக ஒழிக!"
இது எங்கள்
மண்ணின் குரல்
விதைகளின் குரல்
இறந்து போனவர்களின்
கடைசிக் குரல்
பிறக்கும் குழந்தைகளின்
முதல் குரல்
எங்கள் குலதெய்வத்தின்
அசரீரிக் கூற்று

கருத்துகள் இல்லை: