திங்கள், 26 பிப்ரவரி, 2018

உண்மைக் குற்றவாளிகள் யார்..? வன்னியர்களும் தலித்துகளும் பதட்டத்தில் உள்ளனர்.

Gowthama Sanna :கொலை, பாலியல் வல்லுறவு - 2..
வேலாம்புதூர் கிராமத்தில் நடந்த படுகொலைகள் பற்றி வன்னியர்களிடம் உருவாகியிருக்கும் பதட்டம் குறித்து மிகுந்த கவனம் கொள்கிறேன். கிடைத்த முதல்கட்ட தகவலின் பேரிலேயே எனது பதிவு அமைந்தது. எனினும் வேலாம்புதூர் கிராமத்தில் நடந்தவை என்ன..?
வேலாம்புதூர் கிராமத்தில் மேற்கண்ட கொலை நிகழ்வைப் போலவே இரண்டு சம்பவங்கள் நடந்தன.
1. கிராமத்தின் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு வன்னியரின் வீட்டில் புகுந்து ஒரு இளம் பெண்ணைத் தாக்கி வல்லுறவு செய்த கும்பல் அந்த பெண் இறந்துவிட்டாதாக கருதி தப்பி ஓடியுள்ளது. ஆனால் குற்றுயுரும் குலையுருமாக அந்த பெண் பிழைத்துள்ளார். மருத்துவ சிகிச்கைக்குப் பிறகே காப்பற்றப்பட்டார்.
2. இதே பாணியில் மற்றொரு பெண். குரவர் சாதி. தாக்கப்பட்ட வல்லுறவு செய்யப்பட்டார். அவரும் பலத்த உயிர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்.
3. மற்றொரு வன்னியப் பெண்ணின் தாலி பறிக்கப்பட்டது, ஆயினும் வல்லுறவு தாக்குதலுக்குப் முன்பே காப்பாற்றப்பட்டார்.
4. கடைசியாக ஆராயியின் குடும்பம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது. ஆராயியின் மகளும் தலையில் தாக்கப்பட்ட ரத்த வெள்ளத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.

நான்கு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும் ஒரு குறிப்பிட்ட கும்பலாலும் நடத்தப்பட்டுள்ளது. அந்த கும்பல் எது என்பது இன்னும் புலனாகவில்லை.
அக்கிராமத்தில் வன்னியர்களும் தலித்துகளும் பதட்டத்தில் உள்ளனர்.
அடுத்தது யார் மீது தாக்குதலோ என்பது அந்த அச்சத்திற்குக் காரணம்.
ஆயினும் விசாரணைக்கு அழைத்துக் செல்லப்பட்ட தலித் இளைஞர்கள் சந்தேகத்தில் அடிப்படையிலே அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்பது ஒரு காரணம். எல்லா வழக்கிலும் தலித்துகளை முதலில் கைது செய்வது காவல்துறையின் முதல் நடவடிக்கையாக இருக்கிறது என்பதும், காவல்துறையின் பாரபட்சம் உலகப் பிரசித்தம் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆயினும் உண்மைக் குற்றவாளிகள் யார்..? வன்னியர்களாக இருக்கக்கூடாதா என்பது நமது எதிர்பார்ப்பு அல்ல. .
பாமக அல்லாத வன்னியர்கள் மீதே நான் கவலைக் கொள்கிறேன். உழைக்கும் அப்பாவிகளான அவர்களும் இந்த கும்பலால் அந்தக் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வழக்கை நேர்மைகயாக காவல்துறை கையாள வேண்டும். உண்மை குற்றவாளிகள் தலித்தாக இருந்தாலும் கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது நமது நிலைபாடு.
முந்தைய பதிவை சற்றுத் திருத்திக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: