புதன், 28 பிப்ரவரி, 2018

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்


நக்கீரன் :இசக்கி காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயேந்திரர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு ஜெயேந்திரர் மூச்சுதிணறலால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஜெயேந்திரரின் உடல் மருத்துவமனையிலிருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை: