சனி, 3 மார்ச், 2018

கம்யுனிஸ்டுகள் களப்போராளிகள் ஆனால் சமுக பொருளாதார முன்னேற்றத்துக்கான எந்த தீர்வையும் அவை ...

Adv Manoj Liyonzon : சொன்னால் யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள் ஆனாலும் இது தான் உண்மை
கம்யூனிஸ்ட்கள் கடுமையான களப்போராளிகள், சந்தேகம் வேண்டாம், ஆனால் அவர்களிடம் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான எந்த தீர்வுகளும் இருக்காது
திரிபூரா மாநில கம்யூனிஸ்ட் ஆட்சியும் முதலமைச்சர் மானிக் சர்க்காரின் எளிமையும் அந்த மாநில சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்த தீர்வையும் தரவில்லை என்பதே எதார்த்தம்
உடனே, கம்யூனிச ஆட்சியால் கேரளா செழித்து விளங்குகிறது என்று பொங்க வேண்டாம். கேரள வளர்ச்சியில் காங்கிரஸிற்கு சரிபாதி பங்கு உண்டு. மேலும் கேரள சமூக பொருளாதார வளர்ச்சியின் பெரும் பங்கு அந்நிய செலாவணியினுடையது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ஈட்டப்படுகிறது.
இன்னொரு உண்மையை சொல்ல வேண்டுமானால் திரிபூராவை போல் கேரளத்திலும் வேலைவாய்ப்பு குறைவின் காரணமாகவே மலையாளிகள் மத்திய கிழக்காசிய நாடுகளை நோக்கி படையெடுத்தனர் வருவாய் ஈட்ட
மீண்டும் சொல்கிறேன். மிகத் திடமாக சொல்கிறேன். கம்யூனிஸ்ட் கடுமையாக போராடுவார்கள். ஆனால் சிக்கலுக்கான தீர்வே அவர்களிடம் இருக்காது
தீர்வுகளை சொல்லத்தெரியாத போராட்டக்கார்ரகளால் மக்களுக்கு எந்த பயணும் இல்லை
EVM தகிடுதத்தங்களை தாண்டி கம்யூனிஸ்ட்கள் தோற்க இதுவே முதன்மையான காரணம்

கருத்துகள் இல்லை: