திங்கள், 15 மே, 2017

marx.anthonisamy :வெங்கையாவின் திமிர்ப் பேச்சும் சுரணையற்ற அ.தி.மு.க அரசும்.. separation or cooperation பட்லர் ஆங்கிலத்தில்...

Shankar.A :Sources : It was CS Girija Vaidhyanathan who ensured Edappadi was subservient to Venkaiya Naidu during his recent visit. It was Girija who suggested to Edappadi that conducting a review meeting in Secretariat under the chairmanship of Venkaiya Naidu would please the central government. Girija, sources say, is expecting a coveted assignment post retirement for her loyal service to both her community and the BJP goverment. She continues to threaten Edappadi of penal actions by central government and sources say, Edappadi considers Girija Vaidhyanathan to be the voice of Modi. So much for state autonomy.
வெங்கையா நாடுடு தனக்குத் தெரிந்த பட்லர் இங்கிலீஷ் அடுக்கு மொழியில் "நீ ஒழுங்காகச் செயல்பட்டுக் காட்டினால் நாங்கள் ஒத்துழைப்போம்.எங்கள் ஒத்துழைப்பு (cooperation) உங்கள் செயல்பாட்டைப் பொறுத்தது. இல்லாவிட்டால் பிரிவுதான் (separation)" எனத் தமிழக அரசை எச்சரித்துள்ளார். "இல்லாவிட்டால் separation" என்பதன் பொருள் என்ன? - ஒரு மத்திய அரசுப் பிரதிநிதி மாநில அரசை நோக்கி முன் வைத்த எச்சரிக்கை என்கிற புரிதலோடு இதற்குப் பொருள் கொள்ள முயற்சித்தால் நமக்கு என்ன தெளிவு கிடைக்கிறது? பிரித்து விடுவது அல்லது பிரிந்து விடுவது என்றால் என்ன? ஒரு அசட்டு ஆங்கில அடுக்கு மொஇப் பிரயோகம் என்று ஒதுக்காது போனால் இதை வேறெப்படிப் புரிந்துகொள்வது?
மத்திய அரசாங்கம் முதலாளி, மாநில அரசாங்கம் சொன்னதைச் செய்யும் எடுபிடி, சரியாக வேலை செய்யாவிட்டால் டிஸ்மிஸ் எனப் பொருள் கொள்வதா?

இது ஒரு கூட்டாட்சி. மாநில அரசு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கொள்கையும் திட்டமும் கொண்டிருப்பது கட்டாயமில்லை. ஒரு எஜமானனைப் ப்போல் இங்கு வந்து மாநிலத் தலைமைச் செயலகத்திப் பார்வையிடுவதும், அதிமுக மந்திரிமார்கள் கூழைக் கும்பிடுடன் பல்லிளித்து நிற்பதும், பார்வையிடும் மத்திய அமைச்சர் இப்படி எச்சரித்துச் செல்வதும்....
வெட்கக் கேடு.

கருத்துகள் இல்லை: