வியாழன், 18 மே, 2017

ராமேஸ்வரம் கோவிலில் 164 நகைகள் ,162 ஐம்பொன் சிலைகளை கானவில்லை .. தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவருகிறது..

1972ம் ஆண்டு ராமேஸ்வரம்கோயிலில் 325 நகைகள் இருந்து இருக்கிறது. ஆனால் 1995ம் ஆண்டு தணிக்கையின்படி நகைகளின் எண்ணிக்கை 164 என அறிக்கை கூறுகிறது. இந்த இடைப்பட்ட 25 வருடத்தில் எப்படி 161 நகைகள் மாயமானது. அதுபோல 1972ம் ஆண்டு ஐம்பொன் சிலைகளின் எண்ணிக்கை 552 என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் 1995ம் ஆண்டு அறிக்கையின் படி 390 ஐம்பொன் சிலைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. 
அப்படி என்றால் 162 ஐம்பொன் சிலைகள் எங்கே மாயமானது. மன்னர்கள், மற்றும் பல கொடை வள்ளல்கள் பல ராமேஸ்வர கோவிலுக்கு  ச பல வகையான நகைகள், சிலைகள் செய்து கொடுத்து வந்தனர். அப்படி பழமையும், சிறப்பும் வாய்ந்த  நகைகள், சிலைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து மாயமாகி இருப்பது சிவ பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.; ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பட்சிராஜன் இவர். பல்வேறு போராட்டங்களுக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு பெரிய உண்மையை வெளியே கொண்டு வந்துள்ளார். இதனால் இந்து சமய அறநிலையத்துறை விழிபிதுங்கி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கையின் படி 161 நகைகள், 162 ஐம்பொன் சிலைகள், மாயமாகி உள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த நகைகள், சிலைகள் எப்படி மாயமாகும். இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கையின் படி 1972ம் ஆண்டு ராமேஸ்வரம்கோயிலில் 325 நகைகள் இருந்து இருக்கிறது. ஆனால் 1995ம் ஆண்டு தணிக்கையின்படி நகைகளின் எண்ணிக்கை 164 என அறிக்கை கூறுகிறது.

இந்த இடைப்பட்ட 25 வருடத்தில் எப்படி 161 நகைகள் மாயமானது. அது எங்கு சென்றது? யாரால் எடுத்துச் செல்லப்பட்டது?
அதுபோல 1972ம் ஆண்டு ஐம்பொன் சிலைகளின் எண்ணிக்கை 552 என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் 1995ம் ஆண்டு அறிக்கையின் படி 390 ஐம்பொன் சிலைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. அப்படி என்றால் 162 ஐம்பொன் சிலைகள் எங்கே மாயமானது.
இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  தகவல்களை பெற்ற பட்சிராஜன் மதுரைஉயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
1995ம் ஆண்டுக்கு பிறகு எந்தனை நகைகள் மாயமானதோ, எத்தனை ஐம்பொன் சிலைகள் மாயமானதோ தெரியவில்லை என்று புலம்புகின்றனர் சிவ பக்தர்கள்.
1972ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களுக்கே இது வெளிச்சம். ஒன்று மட்டும் நிச்சயம். சிவன் சொத்து குலம்நாசம் என்பது பழமொழி இல்லை.
இது இறைவனின் வாக்கு, இனியாவது ஆண்டவனின் சொத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் கொள்ளையடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த இறைவனிடமே பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். லைவ்டே

கருத்துகள் இல்லை: