வியாழன், 18 மே, 2017

நித்தி - ரஞ்சிதா ஜோடி பல்லாவரத்தில் நில அபகரிப்பு அடாவடி!


சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(67). இவர் தனது உறவினர்களுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்  40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
அந்த இடம் அரசு புறம்போக்கு, கிராம நத்தம் இடம் என்றும், இதன் மதிப்பு ரூ.30 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமநாதன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இந்த இடம் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்களை ராமநாதன் நீதிமன்றத்தில் சமர்பிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்கியது.
இந்நிலையில் பிரபல சாமியார் நித்யானந்தாவின் சீடர்கள் 20க்கும் மேற்ப்பட்டோர் நேற்று நடிகை ரஞ்சிதா தலைமையில் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது ரஞ்சிதா, இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அவர் நித்தியானந்தாவின் சீடர் என்பதால் இந்த இடத்தை அவர் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார்.

எனவே நீ உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என கிருஷ்ணனை மிரட்டியுள்ளார். மேலும் அங்கு சிறிய அளவில் குடிசை ஒன்று அமைத்து நித்தியானந்தாவின் ஆட்கள் அவர் புகைப்படத்தை அங்கு வைத்து பூஜை செய்ய தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் இருதரப்பும் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லைவ்டே

கருத்துகள் இல்லை: